“கெளதம் மேனன் சொன்னப்போ சிக்ஸ் பேக் கொண்டுட்டு வர கடுமையா வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சேன். அப்புறம் தான் என்னோட உடம்பு கொஞ்சம் கொஞ்சமா பலவீனமடைவது எனக்கே புரிஞ்சது. எல்லாருக்கும் என்னோட அட்வைஸ் ஒன்னே ஒன்னு தான். ஒரு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் இல்லாம யாரும் இதை முயற்சி பண்ண வேணாம்” – இது நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் சிக்ஸ் பேக் ஆப்ஸ் பார்த்து வாயை பிளக்காதவர்களே இருந்திருக்க முடியாது.
இந்தி கஜினி திரைப்படத்திற்காக நடிகர் ஆமிர் கான் மெனக்கெட்டது கொஞ்சம் நஞ்சமில்லன்னு சொல்லலாம். ஒரு வருடம் ஜிம்மே கதின்னு கிடந்தார் மனுஷன். அதை ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் வீடியோ எடுத்தும் வச்சி இருந்தாங்க. மேக்கிங் ஆப் கஜினி மாதிரி, அந்த மேக்கிங் ஆப் சிக்ஸ் பேக் வீடியோ இதுதான்.
அப்புறம் நம்ம புரட்சி தளபதி(அவருக்கே அவரே வச்சிகிட்ட பேரு!) கூட அந்த காக்க காக்க ரீமேக் படத்துல சிக்ஸ் பேக் முயற்சி பண்ணினாரு. ஆனா பாவம், படம் ஊத்திக்கிட்டதுனால அது வேஸ்டா பூடுச்சு. அதுல உள்ள போன அவர் மார்க்கெட்டும், கன்னமும் இன்னமும் மேல வரவே இல்ல. இப்படி இந்திய சினிமா ஹீரோக்களால் சிக்ஸ் பேக் கடந்த சில வருடங்களாக கடை கோடி மக்கள் மத்தியில் கூட பிரபலமானது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜிம்மிலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக தினமும் மணிக்கணக்காக மனிதர்கள் வியர்வை சிந்தி போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிலர் சிக்ஸ் பேக்கிற்கு, சிலர் எயிட்(!) பேக்கிற்கு ஆனால் பலரோ சிங்கிள் பேக்கிற்கு(ஹி ஹீ நானும் தான்). அதை நாம லஞ்ச் பேக்குனு கூட சொல்லலாம்.
அப்பேற்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உடற்பயிற்சி மையத்தில் டம்மி பீசுகளும், காமடி பீசுகளும் சிலர் வந்து போவதை காண்பது தவிர்க்க இயலாதது.. அவர்களுக்கு தேவை சிக்ஸ் பேக்கோ, இல்லை உடல் எடை குறைப்பதோ தெரியாது ஆனால் அவர்கள் அதற்காக ஜிம்மில் நடத்தும் அரங்கேற்றம் சொல்லி மாளாது. அந்த மாதிரி நபர்கள் சில சமயம் என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சம் உற்று கவனிச்சா குபீர்னு சிரிப்பு வந்துடும்.. நானும் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு உடற்பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டு இருந்தேன். அப்போது நான் கண்ட அது மாதிரி சில நபர்களையும், நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.. ஓகே வாங்க ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு போலாம்.
சென்ற முதல் நாளே நான் நோட்டமிட்டது என்னவென்றால் அங்கே ஒவ்வொருத்தர் காதிலும் ஒரு ஹெட் செட் தொங்கிக்கொண்டு இருந்தது. உடற்பயிற்சி செய்யும்போது ஹெட் செட் அணியக்கூடாது என்று ஏற்கனவே எங்கோ படித்த அந்த ஞாபகம் கொஞ்சம் நினைவில் வந்து போனது.. காதில் உஷ்ணம் அதிகரிக்குமாம். அதிலும் சிலர் உச்சக்கட்டம், ட்ரெட் மில்லில் ஓடும்போது செல்போனை காதில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் யாரிடமோ(!) வருத்துக்கொண்டு இருப்பார்கள்.. பக்கத்தில் நாம் ஓடும்போது அதை காதில் கேட்கவே சகிக்காது… அங்க கூடவா மிஸ்டர்?
இன்னொரு வகையறாக்கள் இருக்கிறார்கள்… உடற்பயிற்சி செய்யும்போது போன் பேசக்கூடாது என்று அவர்கள் உணர்ந்து இருக்க வேண்டுமென நினைக்கிறன். அவ்வளவு நல்லவர்கள். அதனால் தானோ என்னவோ அவர்கள் ஜிம்மின் உள்ளேயே வருவதில்லை.. வெளியிலேயே போனும் கையும்மாக நிற்பார்கள். சில மணிநேரம் தொடர்ந்து பேசும் ஜாம்பவான்கள் நேரம் ஆகிவிடும் காரணத்தினால் உள்ளே வராமலேயே அப்படியே சென்று விடுவதையும் கண்டு இருக்கிறேன். தானும் ஜிம்முக்கு போகிறேன் என்பதற்காகவோ அவர்கள் வருகிறார்களோ என்னவோ. அப்படியே உள்ளே வருபவர்கள் விரல்களுக்கு வலிப்பு வந்தார் போல் எஸ்.எம்.எஸ். அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த பக்கம் பதில் அனுப்புபவருக்கும் வேறு வேலை வெட்டி இருப்பதாக தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் பேரு…….. எலும்பும் தோலுமா, வத்தலும் தொத்தலுமா, அப்படின்னு சொல்லுவாங்களே, அந்த வகை பசங்க.. எல்லாம் சின்ன பசங்க. அதுல ஒருவன்.. அனேகமா ஏழாவது, எட்டாவது படிக்கணும்னு நெனைக்கிறேன். பாத்தாலே பாவமா இருக்கும்.. சாப்பிட்டு பத்து நாள் இருக்குமோனு தோணுற மாதிரி இருக்ககூடியவன். வெயிட் தூக்க முடியாம தூக்கறதும், அதுக்காக கஷ்டப்படுறதும் பார்க்க முடியவில்லை. எல்லாம் சிக்ஸ் பேக் சினிமா உசுப்பேத்தி விட்ட விடலைகள்.
இது கூட பரவாயில்லைங்க… இன்னொரு நாள். ஜிம்மில் கண்ணாடி பிம்பத்தில் அதை காண நேர்ந்தது.. தூண் மறைத்துக்கொண்டு இருந்ததால் அவரை நான் முழுமையாக காண முடியவில்லை. பக்கவாட்டில் தெரிந்த அவர் முகத்தை பார்த்தால் நிச்சயம் அவருக்கு வயது ஐம்பது அல்லது ஐம்பத்தி ஐந்து இருக்கலாம்.அவர் ஒரு உயரமான கம்பியை பிடித்து அசால்டாக மேலும் கீழும் தொங்கிக்கொண்டு இருந்தார்.
எனக்கு ஒரே ஆச்சர்யம். இந்த வயசுல என்ன ஒரு ஷ்டாமினா??? ஒவ்வொரு தொங்களுக்கும்.. ஒன்று.. இரண்டு.. மூன்று.. என்று அவர் எண்ணுவது வேறு என் காதில் வந்து விழுந்தது. சர்வசாதரணமாக இப்படி தொங்குகிறாரே மனிதர். நாமும் இருக்கிறோமே. அரைமணி நேரம் ட்ரெட் மில்லில் ஒடுவதற்கே….. ச்சே…
இவ்வாறு மனதில் புலம்பிக்கொண்டே கொஞ்சம் நகர்ந்து அவரை எதேச்சையாக பார்த்தேன்… அவர் இடுப்பை கையில் பிடித்தவாறு அவர் பின்னால் நின்று கொண்டு “டிரைனர்” அவரை மேலும் கீழும் தூக்கி விட்டுக்கொண்டு இருந்தார்…
நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்.. 2006 ஆம் வருடம் அணைத்து இளவட்டங்களையும் கட்டிப்போட்ட சில்லுனு ஒரு காதல் திரைப்பட பாடல்.. கவிஞர் வாலியின் உடலிற்கு தான் வயதானதே தவிர அவருடைய சிந்தனையும், மனதும் எப்போதுமே இளமை தான்… அதற்கு உதாரணம் தான் இந்த பாடல்..
இப்பாடலை பாடுவதற்கு பாடகரை தேர்வு செய்வதற்கு முன்னர், டைரக்டரிடம் காண்பிப்பதற்காக தானே டம்மியாக பாடி பதிவு செய்தார் ஏஆர். ரஹ்மான். பிறகு அனைவரும் கேட்டுக்கொண்டதால் அவர் குரலிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது.. எந்த பாடகருக்கு அந்த வாய்ப்பு சென்றிகுமோ தெரியாது. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் குரலை எடுத்துவிட்டு என்னுடைய குரல் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை தோன்றியது… ஹா ஹா ஹா… அதன் முயற்சி தான் இந்த வீடியோ… அவரின் ஹை பிச் குரல் சில இடங்களில் எனக்கு வரவில்லை. கண்டுபிடித்து சொல்லுபவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய ஆஸ்கார் விருது இலவசமாக தரப்படும்.. (புகைப்பட வடிவில்).. ஹி ஹீ ஹீ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது .. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ….. கொடுமை கொடுமையோ….
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது.. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ… கொடுமை கொடுமையோ….
பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை அதை எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனது ஏனோ
வான் இங்கே நீளம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
நேற்று அயன் திரைப்படம் இரவு காட்சிக்கு சென்று இருந்தேன் (தோம்). எதிர்பாராவிதமாக நாங்கள் செல்வதற்குள் பத்து நிமிடம் படம் ஓடி இருந்தது.. இருந்தால் என்ன? தமிழ் படத்தின் கதை புரியாமலா போய்விடபோகிறது என்று பார்க்க ஆரமித்தேன். வழக்கம் போல் சூர்யா சூப்பர்.. மேலும் மேலும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது நடிப்பும், அழகும்.. அட.. தமனாவும் தான்பா நடிக்க ஆரம்பித்துவிட்டது….
“நெஞ்சே… நெஞ்சே…” , ”விழி மூடி யோசித்தால்..” பாடலும் அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக இருக்கும்.. ஆனால் ”நெஞ்சே… நெஞ்சே…” பாடல் படமாக்கப்பட்ட அந்த ஆப்ரிக்க பாலைவனம் ஹிந்தி கஜினியில் ஏற்கனவே பார்த்து விட்டதால் புதுமையாக தெரியவில்லை. ஹிந்தி கஜினியை விட தமிழில் தான் அற்புதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். என்னுடைய மொபைல் ஹலோ டுயுன் இப்போது அந்த பாடல் தான் .. பின்னணி இசையும் அருமை.. ஹாரிஸ் ஜெயராஜை பத்தி சொல்லவா வேண்டும்?
சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு கண்டிப்பாக அனைவரையும் பிரமிக்கவைக்கும்.. ஆப்ரிக்கா அந்த மலைப்பாதை காட்சிகளும், மலேசியா கார் துரத்தும் காட்சிகளும் கண்டிப்பாக தமிழுக்கு புதுசு.. கதை என்னவென்றால், நம்ம சூர்யா ஒரு ஹைடெக் கடத்தல்காரன்.. பிரபு நம்ம சூர்யாவுக்கு பாஸ். விஜய் தொலைக்காட்சிகளில் வரும் அந்த நபர்(மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை) சூர்யாவின் நண்பர். தமன்னா அவரின் தங்கை. தொழில் போட்டியில் பிரபு சாகிறார்.. சூர்யா வில்லனை பழி வாங்குகிறார்.. கடத்தலை விட்டு விட்டு திருந்துகிறார். கடைசியில் கஸ்டம்ஸ் ஆபிசர் ஆகிறார்.. மறக்காமல் தமன்னாவை கைபுடிக்கிறார்.
உலகில் இருக்கும் அணைத்து பெரிய கடதல்கார்களும் பிரபுவுக்கு பழக்கம்.. ஆப்ரிக்கா மலைபகுதிகளில் வாழும் ”மம்போ” என்ற யாரும் நெருங்க முடியாத ஒரு அதிபயங்கர கடத்தல்காரராக காண்பிக்கபடுபவர்கூட நம்ம பிரபுவுக்கு பழக்கமாம். பிரபுவை பார்த்தால் அப்படி கண்டிப்பாக தெரியாது.. முன்னொரு காலத்தில் பெரிய தாதாவாக இருந்தாரம். படத்தில் பிளாஷ் பாக் காட்சிகள் கூட இல்லாததால் நம்ம பிரபு ஒரு காமெடி தாதாவாகவே வலம் வருகிறார்.. அவருக்கு கைபுல்லையாக நம்ம சூர்யா தம்பி.. அங்கேயே எனக்கு படத்தின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது..
நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் சூர்யா, ஆப்பிள் ஐ போன் வைத்து இருக்கிறார், ஆப்பிள் மாக் லேப்டாப் வைத்து இருக்கிறார் , நினைத்தால் வெளிநாடு கிளம்புகிறார், கூகிள் இணையத்தளத்தில் கடத்தல் செய்யும் டெக்னிக்குகளை கண்டுபிடிக்கிறார்.. எல்லாம் பண்றார்.. அப்புறம் எதற்கு பிரபுவுக்கு கைபுல்லையாக? பெருசா காரணம் இல்லையே? சூர்யாவின் நண்பராக வரும் அந்த கதாபாத்திரம் எரிச்சலோ எரிச்சல்.. (நல்ல வேலை பாதியிலேயே அவர் இறந்து விடுவதால் பார்வையாளர்கள் தப்பித்து கொண்டார்கள்).. தங்கை தமன்னா சூர்யாவை காதலிக்க வைக்க அவர் பேசும் வசனங்கள், செயல்கள் அருவருப்பு. கிரி படத்தில் வடிவேலு சொல்லும் ”பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது” ரகம்.. அது காமெடி..ஆனா இது அருவருப்பு.. தங்கச்சிய பத்தி எந்த அண்ணன் இப்படி பேசுவான்? அது மட்டும் இல்லாமல்.. படத்தில் ரசிக்க முடியாத பல இரட்டை அர்த்த வசனங்கள் நம்ம சூர்யா பேசுகிறார். கொடுமை..
அருமையான கதைக்களம், நடிப்பில் மெருகேறிய சூர்யா, அழகிய தமன்னா, பிரமிக்க வைக்கும் சண்டைகாட்சிகள், தமிழுக்கு புதிய வெளிநாட்டு படபிடிப்பு இடங்கள்…. இவை அனைத்தும் இருந்தும் திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனங்கள் இல்லையே டைரக்டர் ஆனந்த் சார். இப்படி துட்ட விரயம் பண்ணிடீன்களே? பேசாமல் நம்ம எழுத்தாளர் சுபா எழுதிய இந்த கதையை நாவலாக பிரசுரம் செய்து இருந்தால்.. ஏ.வீ .எம் மின் பணம் மிச்சம். நீங்க என்ன சொல்றீங்க? படம் நல்ல இருக்கா, நல்லா இல்லையா? உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது எதை வேண்டுமானாலும் கீழே பதிவு செய்யவும்.
இதோ மேலும் சில பேர் அயன் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு இருக்காங்க.
ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று தான் கஜினி ஹிந்தி படத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது… ஏற்கனவே தமிழில் பலமுறை நான் பார்த்து ரசித்து பிரமித்த ஒரு திரைப்படம். அதே தான் ஹிந்தியிலும் என்று தெரிந்தும் நான் இப்போது கஜினி ஹிந்தியில் பார்க்க சென்றதற்கு மூன்று காரணங்கள் உண்டு.
ஒன்று ரஹ்மான், இரண்டு ஆமிர் கான், மற்றொன்று முருகதாசின் திரைக்கதை… கஜினி தமிழில் பின்னணி இசை முதல் பாடல்கள் வரை அனைத்தும் இன்னமும் நான் தினமும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்… அதே காட்சிகளுக்கும், பாடல் situationனுக்கும் ரஹ்மானின் ரசனை என்ன? அவர் அமைக்கும் பின்னணி இசை என்ன? ரஹ்மானும், தமிழில் இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜும் எப்படி மாறுபடுகிறார்கள் என்று உணரும் சந்தர்ப்பமாக இந்த ஹிந்தி படத்தை கருதினேன்.
ஹிந்தி பின்னணி இசையில் என்னை பொறுத்த வரையில் துரத்தும் காட்சிகள், சண்டை காட்சிகள் போன்ற விறுவிறுப்பான காட்சிகளில் ரஹ்மானின் இசை மிரட்டுகிறது. ஆனால் ரொமான்ஸ், உணர்வுகளை (Emotions) வெளிப்படுத்தும் காட்சிகளில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையே மெய்சிலிர்க்க வைக்கிறது. சூர்யா முதன் முதலாக அசினை காணும் போதும், புத்தாண்டின் பொது காதலை வெளிப்படுத்தும் போதும் இருந்த ஹாரிஸ் ஜெயராஜின் இசையின் உயிர் ஹிந்தியில் இல்லை.
மேற்கொண்ட வகையான காட்சிகளில் பாடல்களில் இசை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறார் ரஹ்மான் என்றே எனக்கு தோன்றுகிறது… தமிழ் கஜினியின் பின்னணி இசை இன்னமும் என்னுடைய HTC TOUCH WINDOWS செல்போனில் ரிங்டோனாக உள்ளது. ஹாரிஸின் பின்னணி மெனக்கெடல் தமிழில் கஜினி மிகவும் ரசித்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.
பாடல்களை பொறுத்தவரை குறைசொல்ல ஏதும் இல்லை. ஏற்கனவே ஹிந்தியில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.. ஹிந்திக்கு ஏற்றவாறு “ஒரு மாலை” (பெக்கா), “ரஹாதுல” (அயே பச்சு), சுட்டும் விழி சுடரே (குஜாரிஷ்), எக்ஸ் மச்சி (லடூ) போன்ற பாடல்கள் இருக்கிறது… மூன்று பாடல்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது… ஆனால் “கைசே முஜே” என்ற பாடல் வேறு ஒரு காட்சிக்கு இடையில் மனதை உருக்கும் ஒரு பாடலாக இருக்கிறது… தமிழில் இது இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..
ஆமிர் கான்… கண்களிலேயே பேசும் ஒரு நடிகன். முதல் பாதியின் போது தமிழ் கஜினியில் இருந்து மீள முடியாததால், சூர்யாவின் நடிப்பும், ஹாரிஸின் பின்னணி இசையும் வந்து போனது. ஆனால் பிற்பாதியில் ஏற்பட்ட திரைக்தை மாற்றத்தாலும், காட்சி அமைப்புகளாலும் படத்தோடு ஒன்றி போக செய்தது. புதிய அனுபவம். படத்தின் முடிவில் அவ்வளவு அழுத்தம் மிக்க உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சி அமைப்பு. திரைக்கதையை பொறுத்தவரை ஹிந்தி கஜினி செதுக்கப்பட்டுள்ளது.. சூர்யா… you really missed it. At least tamil audience missed it. The most emotional moments… mind blowing scenes.
மொத்தத்தில் , ஹிந்தி கஜினியின் திரைக்கதையில், தமிழ் கஜினியின் பின்னணி இசையில் சூர்யா நடித்திருந்தால்… தமிழ் ரசிகர்ளின் மனதை விட்டு அது சுலபத்தில் அகலாது.. நீங்கள் என்ன நினைகிறீர்கள்? உங்களுக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்ன? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..