Posts Tagged என் குரல்

    தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்

    வானம் திரைப்படத்திற்கு நா.முத்துக்குமார்அவர்கள் எழுதி யுவன் பாடிய பாடல் இது..  என் குரலில் ஒரு முயற்சி.. கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

    தெய்வம் வாழ்வது எங்கே,
    தெய்வம் வாழ்வது எங்கே
    தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
    காதலினால் மூடிவிட்ட,
    கண்கள் இன்று திறக்கிறது..
    திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..

    தெய்வம் வாழ்வது எங்கே,
    தெய்வம் வாழ்வது எங்கே
    தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
    காதலினால் மூடிவிட்ட,
    கண்கள் இன்று திறக்கிறது..
    திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

    அடுத்தவன் கண்ணில் இன்பம்..
    காண்பதும் காதல் தான்..
    இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..
    தனக்காக வாழ்வதா வாழ்க்கை..
    விதி ஈரமற்று தந்த போக்கை..
    இவன் பாவம் கங்கையில் தீர.
    இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும்.. நாளும்..

    Share

    என் காதல் சொல்ல நேரமில்லை

    பையா திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் “என் காதல் சொல்ல நேரமில்லை”. மிகவும் அருமையான மெலோடி. எத்தனை முறை எழுதினாலும் நா.முத்துக்குமாருக்கு காதல் பற்றி எழுதுவதில் சலிக்கவில்லை போலும். இந்த பாடலின் மிகப்பெரிய பலம் அவருடைய எழுத்துக்கள் தான். தற்போது வந்த பாடல்களில் மிகவும் ரசிக்கப்படும் பாடல் இது. சில பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். அந்த வரிசையில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன் அதுவும்  திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டபோது ஆனால் இந்த பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடலில் என்ன விசேஷம் என்றால் யார் வேண்டுமானாலும் அதை சுலபமாக பாடும் படி இசையமைத்து இருப்பார். மிகவும் பிடித்த பாடலை யாராலும் முணுமுணுக்காமல் இருக்க முடியாது. இதோ நானும் முயற்சி செய்து இருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்.

    இதோ போனசாக அதன் பாடல் வரிகளும்.

    என் காதல் சொல்ல நேரமில்லை..
    உன் காதல் சொல்ல தேவையில்லை..
    நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
    உண்மை மறைத்தாலும் மறையாதடி…

    உன் கையில் சேர ஏக்கமில்லை…
    உன் தோளில் சாய ஆசையில்லை…
    நீ போன பின்பு சோகமில்லை…
    என்று பொய் சொல்ல தெரியாதடி…

    உன் அழகாலே அழகாலே
    என் வெயில்காலம் அது மழைக்காலம்…

    உன் கனவாலே உன் கனவாலே
    மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்….

    காற்றோடு கைவீசி நீ பேசினால்
    என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
    வயதோடும் மனதோடும் சொல்லாமலே
    சில எண்ணங்கள் வலைவீசுதே..

    காதல் வந்தாலே கண்ணோடுதான்
    கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?

    கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..
    இந்த விளையாட்டை ரசித்தேனடி..
    உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும்
    அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்க்கும்

    ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..
    இந்த நிமிடங்கள் நீளட்டுமே..
    வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..
    இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

    யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்…
    என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…

    சிறு பிள்ளையென என்தன் இமைகளது
    உன்னை கண்டாலே குதிக்கின்றதே…

    என் அதிகாலை என் அதிகாலை
    உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..

    என் அந்திமாலை என் அந்திமாலை
    உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்…

    Share

    நினைத்து நினைத்து பார்த்தேன்

    7ஜி ரெயின்போ காலனி என்ற தமிழ் திரைப்படத்தின் நினைத்து நினைத்து பார்த்தேன்  பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? சில வருடங்களுக்கு முன்னால் எல்லோர் மனதையும் கட்டி வைத்த பாடல் அது.  அதை முனுமுனுக்காதவர்களும் யாரும் கண்டிப்பாக இருக்க முடியாது. எனக்கும் அது மிகவும் பிடித்த  பாடல்.  கல்லூரி வாழ்கையின் போது அவ்வளவு கிரேஸ் அதன் மேல். அடிக்கடி நான் தனிமையில் பாடும் பாடலில் இதுவும் ஒன்று. நீண்ட மாதங்களாக கிடப்பில் இருந்த இதோ அதன் வீடியோ பாடல் என் குரலில் இப்போது என் வலைப்பூவில்.. ஓரளவிற்கு பீ….ல் பண்ணி பாடி இருக்கேன்.. அதனால அவ்வளவு மோசமா இருக்காதுன்னு நினைக்கிறன்…. ஹி.. ஹீ.. ஹீ.. கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.. உங்கள் பொறுமைக்கு நன்றி..

    இதோ வழக்கம் போல் அதன் பாடல் வரிகளும் போனஸாக…

    நினைத்து நினைத்து பார்த்தேன்
    நெருங்கி விலகி நடந்தேன்
    உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
    உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
    எடுத்து படித்து முடிக்கும் முன்னே
    எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
    உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
    உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

    அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
    உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
    உதிர்ந்து போன மலரின் மெளனமா…
    தூது பேசும் கொலுசின் ஒலியை
    அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
    உடைந்து போன வளையல் பேசுமா…
    உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
    விரல்கள் இன்று எங்கே?
    தோளில் சாய்ந்து கதைகள் பேச
    முகமும் இல்லை இங்கே!
    முதல் கனவு முடிந்திடும் முன்னமே
    தூக்கம் கலைந்ததே!

    நினைத்து நினைத்து பார்த்தேன்
    நெருங்கி விலகி நடந்தேன்.
    உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
    உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

    பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
    காலம் தோறும் காதினில் கேட்கும்
    சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?…
    பார்த்து போன பார்வைகள் எல்லாம்
    பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
    உயிரும் போகும் உருவம் போகுமா?…
    தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
    தீயில் சேர்ந்து போகும்
    திருட்டு போன தடயம் பார்த்தும்
    நம்பவில்லை நானும்
    ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
    என்றே வாழ்கிறேன்….

    Share

    ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது

    அது ஒரு அழகிய, அமைதியான ஞாயிற்றுக்கிழமை.. “நாடோடிகள்”ன்னு ஒரு தமிழ் படம் வந்துருக்கு .. சூப்பரா இருக்குன்னு நிறைய பேர் சொன்னாங்க.. நானும் ரெண்டு வாரமா அந்த படத்துக்கு போலாம் போலாம்னு பார்த்தேன் ஆனா நேரமே அதுவரை சிக்கவில்லை. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எப்படியும் பார்த்தடனும்னு ஒரு முடிவோட இருந்தேன். காலைல எழுந்ததும் வீட்ல இருக்கற எல்லாரையும் மதியம் படத்துக்கு போறோம் எல்லாரும் கிளம்பிடுங்கன்னு  சொன்னேன். யாரும் டக்குனு வரலைனு சொல்லிட்டாங்க.. என்ன பண்றது??? படம் சூப்பரா இருக்கு அப்படி இப்படின்னு பில்ட் அப்  கொடுத்து எல்லாரையும் சம்மதிக்க வச்சுட்டேன். எப்போதாவது தான் படத்துக்கு போகிறோம் நல்ல படமா போலாம்னு எடுத்த முடிவு தான் இது.

    nadodigal

    ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளெக்ஸ் இனையதளத்துக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்தேன். அது பல்திரைகள் கொண்ட ஒரு திரையரங்கம்.. மற்ற திரைகளில் ஓடும் எந்த படமும் நன்றாக இருப்பது போல் தோன்றவில்லை.. நாடோடிகளுக்கு படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா என்று ஆவலுடன் பார்த்தேன். அப்பாட டிக்கெட் இருந்தது.. உடனே அவசர அவசரமாக நான்கு டிக்கெட் மதிய காட்சிக்கு முன்பதிவு செய்தேன்.

    ஏற்கனவே வீட்டில் லேட்.   மதியம்  2:15 மணிக்கு திரைப்படம் என்று டிக்கெட்டில் போட்டு இருந்தது. மணி இப்போதோ 1:50.. டிக்கெட்டை அச்சிடுவதற்கு கூட நேரம்  இல்லை. என் செல்பேசியில் அந்த டிக்கெட்டின் மின்னஞ்சல் நகல் இருந்தது.   கவுண்டரில் அதை காண்பித்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் இருந்தேன்.அவசர அவசரமாக திரையரங்கிற்கு போய் சேர்ந்தால் அதற்குள் மணி 2:10PM

    டிக்கெட் கவுண்டர்:
    நான்: Excuse me, I’ve booked my tickets thru online for this show. Can I get the original tickets?

    பணியாளர்: Yea sure. Can I please have the proof for online reservation?

    நான்: Unfortunately, I did not print  the tickets that I received in my email but I’ve that email on my mobile. என் செல்பேசியின் அந்த மின்னஞ்சலை திறந்து காண்பித்தேன். (நேரம் வேறு ஆகிவிட்டது “நாடோடிகள்” இந்நேரம் ஆரம்பம் ஆகி இருக்குமே…)

    பணியாளர்: என் செல்பேசியை வாங்கிக்கொண்டார். என்ன மாடல் சார் இந்த மொபைல்?

    நான்: (ஆகா. படம் வேற ஆரமிச்சி இருப்பாங்களே.. எல்லாரும் எனக்கு வெயிட் பண்றாங்களே) அது விண்டோஸ் மொபைல் சார். படம் எத்தன மணிக்கு ஆரமிக்கும்?

    பணியாளர்: படம் இப்போ போட்டுடுவாங்க. இந்த மொபைல் என்ன ரேட் வருது சார்?

    நான்: (விடமாட்டார் போல இருக்கே) நான் வாங்கும் போது பதினைந்தாயிரம் இருந்ததுங்க.. எந்த ஸ்க்ரீன்ல சார் இந்த படம்? டிக்கெட் நம்பர் இந்த ஈமெயில்லில் இருக்கும் பாருங்க.
    பணியாளர்: ஸ்க்ரீன் நம்பெர் ஒன்னுல இந்த படம் சார். இந்த மொபைல் என்ன கம்பனி சார், நான் இதுக்கு முன்னாடி பார்த்து இல்லையே. வெளிநாட்டுல வாங்குனீங்களா?

    நான்: (கடவுளே நம்ம அவசரம் நமக்கு தான் தெரியும்) இந்த மொபைல் கம்பெனி பேரு ஹச் டி சீ. இப்போ இந்தியாவிலேயே கிடைக்குது. சார்.. படம் போட்டாச்சுனு நினைக்கிறன்..

    பணியாளர்: ஓ… அப்படியா. சரி சரி.. இதோ ஒரு நிமிஷம் சார். (அவசரம் புரிந்தவராக) உடனே டிக்கெட் பிரிண்ட் எடுத்து கொடுத்தார்.

    கடவுளே… டிக்கெட் வாங்கிட்டு ஊள்ளே போறதுக்குள்ள இவ்ளோ பிரச்சனையா? அவசர அவசரமாக அனைவரும் ஸ்க்ரீன் – 1 வழி நோக்கி வேகமாக நகர்ந்தோம். உள்ளே சென்றால் நல்ல வேலை படம் இன்னும் ஆரமிக்கப்படவில்லை. எங்களுக்காக காத்திருந்த மாதிரி நாங்கள் சென்றவுடன் தான் பெயர் ஆரமித்தது. படத்தின் பெயர் கூட போடவில்லை ஆனால் முதல் காட்சியில் நடிகை லட்சுமி ராய்.. அடடா என்ன இது குழப்பம்? நாடோடிகள் படத்தில் இந்த பொண்ணா நடிச்சிருக்கு? யோசித்து முடிப்பதற்குள் படத்தின் பெயர் வந்தது.. வா……”வாமனன்”. என்னது. இது நாடோடிகள் இல்லையா? வாமனனா? இது என்ன புது கூத்து? ஸ்க்ரீன் மாத்தி உட்காந்துட்டமா? டிக்கெட் எடுத்து பார்த்தேன்.  ஆ.. ஸ்க்ரீன் ஒன்னு.. இல்லையே கரெக்டா தான வந்து இருக்கோம்.!!! ஒரே குழப்பம். படம் கீது மாத்தி போட்டாங்களா? இல்ல.. இல்ல.. அதுக்கு ச்சான்சே எல்லா. பின்ன எப்புடி???

    ஆங்.. செல்பேசியில் மின்னஞ்சலை திறந்தேன்.. டிக்கெட்: 4 , வகுப்பு: முதல் வகுப்பு  திரை: 1 திரைப்படம்.. வாமனன்.. ஆகா நான் தான் மாத்தி புக் பண்ணிட்டேனா.. நம்ம தப்பு தானா? பக்கத்துல எல்லாரும் என்னை முறைக்கராங்கன்னு தெரியது … ஆனா நான் டக்குனு திரும்பல..  ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் ஒரு சொதப்பல். வேற என்ன பண்றது? புக் பண்ணும் போது பார்த்து பண்ணி இருக்கணும். எல்லாரையும் சமாதனப்படுத்தி மறுபடியும் அடுத்த வாரம் நாடோடிகள் கூட்டிட்டு போறேன்னு வாக்குறுதி கொடுத்தேன். என்னுடைய ஒரே எண்ணம் இப்போ பாக்கப்போகிற இந்த படத்திற்கு “ஏன் வந்தோம்” னு இல்லாம இருந்தா போதும்.  கேமரா, காமெடி எல்லாமே பரவாயில்லை… நான் தற்சமயம் மிகவும் ரசித்த “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது” பாடல் இந்த படம்  என்பது தான் என் ஒரே ஆறுதல். நல்ல வேலை படம் ஒன்னும் மோசமில்லை. வீட்டிற்கு வரும்வரை அந்த பாடல் மட்டும் தான் என் ஞாபகத்தில் இருந்தது..

    நமக்கு பிடித்த பாடல்னா பாட தோணாதா? நானும் பாடினேன். வீட்டிற்கு வந்ததும் அதை பதிவு செய்து பார்த்தேன். ரொம்ப கஷ்டம்ப்பா. ரூப் குமார் ரதோட் பாடிய அந்த பாடல் சான்சே இல்ல. கொஞ்சம் புகைப்படங்களை சேர்த்து மேலும் அதை மெருகேற்ற முயற்சி செய்தேன். இதோ.. பார்த்து விட்டு எப்படி என்று சொல்லவும்..

    ஒரு தேவதை பார்க்கும் நேரமிது
    மிக அருகினில் இருந்தும் தூரம் இது
    இதயமே ஓ
    இவளிடம் ஓ
    உருகுதே ஓ…
    இந்த காதல் நினைவுகள் வான்தானே…..
    அது தூங்கும் போதிலும் தூங்காதே……….
    பார்க்காதே…. ஓ………
    என்றாலும்….. ஓ….
    கேட்காதே….. ஓ….

    இது அனைத்தும் நடந்து சரியாக ஒரு வாரம்.. சரி இந்த வாரமாவது நாடோடி படத்திற்கு சரியாக போகணும் நேற்று மறுபடியும் யோசனை.. ஐந்து திரைகள் கொண்ட திரையரங்கிற்கு சென்றால் தானே பிரச்சனை. கே .எஸ். பிக் சினிமாஸ்(ஒரே திரை தான் – So குழப்பமில்லை)  திரையங்கிற்கு நேற்று இரவு காட்சிக்கு ஆன்லைனில் புக் செய்தேன். பத்து முப்பதிற்கு திரைப்படம் , எதற்கு வம்பு..  சரியாக பத்து மணிக்கே போனோம். சீக்கிரம் வந்து விட்டோம்.. சரியான படம் தான். இன்னைக்கு எந்த பிரச்சனையும் வராது என்று ஒரு நம்பிக்கை… இருந்தும் பிரச்சனை வந்ததே.

    டிக்கெட் கவுண்டர்.

    நான்: ஹலோ. நான் ஆன்லைனில் புக் செய்தேன். இதோ எஸ்.எம் எஸ் கன்பிர்மேசன். (என் செல்பேசியை கொடுத்தேன்)

    பணியாளர்: இது என்னாது சார் ஹெச்.டி.சி? மொபைல் போனா?

    (ஆகா கேலம்பிடாங்கயா.. கேலம்பிடாங்க…)

    நான்: ஆமாம். மொபைல் தாங்க.

    பணியாளர்: எவ்ளோ சார் இது.. இந்தியாவுல கிடைக்குதா? கொஞ்சம் உள்ள வாங்க சார்.

    நான்: (மறுபடியுமா…??? போனா வாரம் அங்க.. இந்த வாரம் இங்கயா? சரி  சரி இந்த வாரம் தான் நமக்கு இன்னும் நேரம் இருக்கே. உள்ள போய் தான் பாப்போம்…) இந்த மொபைல் நம்ம சேலம்லயே கிடைக்குதுங்க. இப்போ சுமார் பதினைத்தாயிரம் இருக்கும்னு நினைக்கிறன்.

    பணியாளர்: ஓஹோ.. அப்படியா? அதெல்லாம் சரி. இந்த ஆன்லைன்ல டிக்கெட் புக் பண்றீங்களே, அது எப்படி சார்.

    நான்: உங்களோட வெப் சைட்டுல போய் பண்ணலாம்க. ஜஸ்ட் தியேட்டர், ஷோ, தேதி செலக்ட் பண்ணி கார்டு மூலமா பணம் கட்டின போதும்.

    பணியாளர்: சார் கொஞ்சம் உங்க மொபைல்ல புக் பண்ணி காட்ட முடியுமா…

    நான்: இல்லைங்க. நான் லேப்டாப் ல பண்ணினேன்.

    பணியாளர்: ஓ.. லேப்டாப் ல புக் பண்ணி மொபைல்க்கு அனுப்பிடீங்களா? இப்போ புரியுது சார். இந்தாங்க சார் உங்க டிக்கெட். .
    (ஒரு வழியாக கடைசியில் ஓரளவு அவர் புரிந்து கொண்டதால் எனக்கு டிக்கெட் தரப்பட்டது)

    நல்லவேளை இந்த வாரம் எப்படியோ நாடோடிகள் பார்த்து விட்டோம். படம் எப்படீன்னு கேட்கறீங்களா? அந்த திரைப்படத்தை பற்றி விமர்சனம் எழுதி இந்த இடுக்கையை மேலும் இழு……..க்க  விரும்பவில்லை. படம் சூப்பர். அவ்ளோ தான்.. நீங்களாவது என்னை மாதிரி ஆன்லைன்ல புக் பண்ணி மாட்டிக்காதிங்க. அதுதான் முக்கியம். அப்படி ஏற்கனவே மாட்டி, இல்ல வேறு ஏதேனும் சுவாரசியமான சம்பவம் ஏதாவது இருந்தா கீழே பகிர்ந்துக்கோங்க.

    Share

    அராரிராரோ – ராம் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

    அராரிராரோ…. நான் இங்கே பாட.. தாயே நீ கண்ணுறங்கு… என்னோட மடி சாய்ந்து….
    யுவன் ஷங்கர் ராஜா இசையில், கவிஞர் சிநேகனின் வரிகளில் ஜேசுதாஸ் அவர்கள் ராம் திரைப்படத்திற்காக பாடியது. இந்த பாடலை பிடிக்காதவர்கள் நிச்சயமாக யாரும் இருக்க முடியாது… எனக்கும் தான்.. நான் அடிக்கடி முனுமுனுக்கும் இந்த பாடலை பதிவு செய்தால் என்ன என்று தோன்றியது.

    ஜேசுதாஸ் அவர்களின் குரலை நீக்கிவிட்டு என்னுடைய குரலை நுழைத்து பார்க்கலாமா?. இது கண்டிப்பாக விஷப்பரிச்சை என்று தெரியும். ஜேசுதாஸ் அவர்களின் குரலில் அந்த பாட்டை கேட்டுவிட்டு வேறு ஒரு நல்ல பாடகரில் குரலில் கூட அந்த பாட்டை கேட்க நம்மால் முடியாது.. அவர் குரல் தான் அந்த பாட்டின் உயிர். அப்படி இருக்கையில்  நான் பாடினால்? பரவாயில்லை… ஆசைப்பட்டுவிட்டோம்.. பாடி தான் தொலைத்துவிடலாமே…
    இதோ..  அந்த வீடியோ பாடல் என் குரலில்..

    உங்கள் பொறுமையை பாராட்டும் வகையில் அதன் பாடல் வரிகள் போனசாக…

    ஆராரிராரோ….நான் இங்கு பாட….
    தாயே நீ கண் உறங்கு.
    என்னோட மடி சாய்ந்து.
    ஆராரிராரோ… நான் இங்கு பாட….
    தாயே நீ கண் உறங்கு.
    என்னோட மடி சாய்ந்து.

    வாழும் காலம் யாவுமே..
    தாயின் பாதம் சொர்க்கமே
    வேதம் நான்கும் சொன்னதே.
    அதை நான் அறிவேனே!!
    அம்மா என்னும் மந்திரமே ..
    அகிலம் யாவும் ஆள்கிறதே

    ஆராரிராரோ… நான் இங்கு பாட….
    தாயே நீ கண் உறங்கு.
    என்னோட மடி சாய்ந்து.

    வேர் இல்லாத மரம்போல்
    என்னை நீ பூமியில் நட்டாயே…
    ஊர் கண் என் மேல் பட்டால்
    உன் உயிர் நோக துடித்தாயே
    உலகத்தின் பந்தங்கள் எல்லாம்..
    நீ சொல்லி தந்தாயே…
    பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
    வழி நடத்தி சென்றாயே…
    உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..
    நானே…. தாயாய் மாறிட வேண்டும்

    ஆராரிராரோ நான் இங்கு பாட
    தாயே நீ கண் உறங்கு
    என்னோட மடி சாய்ந்து

    தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
    நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா.
    மண் பொன் மேல் ஆசை துறந்த
    கண் தூங்காத உயிர் அல்லவா.
    காலத்தின் கணக்குகளில் செலவாகும்
    வரவும் நீ……
    சுழல்கின்ற பூமியில் மேலே சுழலாத
    பூமியும் நீ………
    இறைவா நீ ஆணையிடு
    தாயே நீ எந்தன் மகளாய் மாற……..

    ஆராரிராரோ நான் இங்கு பாட
    தாயே நீ கண் உறங்கு
    என்னோட மடி சாய்ந்து…..

    Share

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா

    என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன?  முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.

    நிறைய உயிரிழப்புகளை  நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில்  இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.

    என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை  நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.

    போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா  -  இதோ  நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு  இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
    நீ தேடிக்கொண்டு இருக்கிறாயா?
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

    என்னுடைய வாழ்கையின்
    எல்லா கேள்விகளுக்கும்
    பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்

    என்னை தனியாக விட்டுச்செல்வாயா
    இல்லையேல்
    என்னருகில் துணையாக இருப்பாயா?

    இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?
    இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?
    எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது…

    அவன்
    விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்
    உயிருடன் இருப்பதற்கு.

    சரியான நேரத்தில்,
    ஒரே ஒரு தருணத்தில்,
    ஒரு நிமிடமாவது,
    உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?

    நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,
    ஆனால் நமக்கு தேவையான அன்பை
    அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.

    நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
    காரணத்தை தேடுகிறாயா?

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    என்று அவன் சொன்னான்..

    இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு
    ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.
    இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்
    குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..
    என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.

    நீ கொடுக்க விரும்பாத போது
    என்னை எடுக்க விடாதே…
    என்னை வாழவிடு
    அது போதும்…

    நீ கொடுக்க விரும்பாத போது
    என்னை எடுக்க விடாதே…
    என்னை வாழவிடு
    அது போதும்…

    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
    எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

    நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
    காரணத்தை தேடுகிறாயா?

    Share

    நியூ யார்க் நகரம் – ஜில்லுனு ஒரு காதல் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

    நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்.. 2006 ஆம் வருடம் அணைத்து இளவட்டங்களையும் கட்டிப்போட்ட சில்லுனு ஒரு காதல் திரைப்பட பாடல்.. கவிஞர் வாலியின் உடலிற்கு தான் வயதானதே தவிர அவருடைய சிந்தனையும், மனதும் எப்போதுமே இளமை தான்… அதற்கு உதாரணம் தான் இந்த பாடல்..

    இப்பாடலை பாடுவதற்கு பாடகரை தேர்வு செய்வதற்கு முன்னர், டைரக்டரிடம் காண்பிப்பதற்காக தானே டம்மியாக பாடி பதிவு செய்தார்  ஏஆர். ரஹ்மான்.  பிறகு அனைவரும் கேட்டுக்கொண்டதால் அவர் குரலிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது.. எந்த பாடகருக்கு அந்த வாய்ப்பு சென்றிகுமோ தெரியாது. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் குரலை எடுத்துவிட்டு என்னுடைய குரல் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை தோன்றியது… ஹா ஹா ஹா… அதன் முயற்சி தான் இந்த வீடியோ… அவரின்   ஹை பிச் குரல் சில இடங்களில் எனக்கு வரவில்லை. கண்டுபிடித்து சொல்லுபவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய ஆஸ்கார் விருது இலவசமாக தரப்படும்.. (புகைப்பட வடிவில்).. ஹி ஹீ ஹீ  :)

    இதோ போனஸாக அதன் பாடல் வரிகளும்….

    நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
    பணியும்  படர்ந்தது .. கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது.

    நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
    தனிமை  தனிமையோ….. கொடுமை  கொடுமையோ….

    நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
    பணியும்  படர்ந்தது.. கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது.

    நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
    தனிமை  தனிமையோ… கொடுமை  கொடுமையோ….

    பேச்செல்லாம்  தாலாட்டு  போல என்னை  உறங்க  வைக்க  நீ  இல்லை
    தினமும்  ஒரு  முத்தம்  தந்து  காலை  காபி  கொடுக்க  நீ  இல்லை
    விழியில் விழும்  தூசி  தன்னை அதை  எடுக்க  நீ இங்கு இல்லை
    மனதில்  எழும்  குழப்பம்  தன்னை  தீர்க்க  நீ இங்கே  இல்லை
    நான்  இங்கே  நீயும்  அங்கே இந்த  தனிமையில்  நிமிஷங்கள்  வருஷம்  ஆனது ஏனோ
    வான்  இங்கே  நீளம்  அங்கே  இந்த  உவமைக்கு  இருவரும்  விளக்கமானது ஏனோ

    நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
    பணியும்  படர்ந்தது

    நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
    எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

    ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ

    வா அன்பே   நீயும்  வந்தால்  செந்தணல்  கூட  பனிக்கட்டி  போல  மாறுமே

    நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
    பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது

    நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
    தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ

    Share

    போகாதே போகாதே – தீபாவளி திரைப்பட வீடியோ பாடல் – என் குரலில்

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதுகிறேன். தீபாவளி திரைப்படத்தில் வரும் “போகாதே போகாதே” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.. நான் அதிகம் கேட்பதும், அதிகம் முனுமுனுப்பதும் இந்த பாடல்தான்.. ஒரு ”ஆர்வத்தில்” நானே பாடி, பதிவு செய்து, கேட்டு பார்த்தேன்.. நான்றாக இருந்தது போல் தோன்றியதால் இதோ  என் வலை பதிவின் மூலம் இணையத்தில் உலா வரச்செய்கிறேன்… ஹீ ஹீ ஹீ

    சென்ற  வருடமே என் குரலில் நான் பதிவு செய்த இந்த பாடல், நேற்று தான் வீடியோவில் புகுத்தி யூடுபில் ஏற்றினேன்.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். இந்த பாடலை திரையில் பின்னணியில் பாடிய யுவன் ஷங்கர் ராஜாவை விட சூப்பர் என்று எழுதி காமெடி கீமடி பண்ண கூடாது.. ஆமா..  சொல்லிட்டேன்..  :)
    Pogathey Pogathey Karaoke Song From Deepavali by praveen-kumar-c

    இதோ போனஸ் ஆக அதன் பாடல் வரிகளும்…

    போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
    போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

    உன்னோடு வாழ்ந்த…  காலங்கள் யாவும்…  கனவாய் என்னை மூடுதடி…
    யாறென்று நீயும்… என்னை பார்க்கும் போது… உயிரே உயிர் போகுதடி….
    கல்லறையில் கூட…  ஜன்னல் ஒன்று வைத்து… உந்தன் முகம் பார்ப்பேனடி…

    போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
    போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

    கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்.
    அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்.
    நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு.
    நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு..
    உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….

    போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
    போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

    அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்.
    அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்.
    கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
    என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே.
    பெண்ணே நீ இல்லாமல்… பூலோகம் இருண்டதடி

    போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
    போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

    Share

    நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்

    நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, வாரணம் ஆயிரம் திரைப்பட வீடியோ பாடல்…. மீண்டும் என் குரலில்…  ஹரிஹரனை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு அற்புதமாக பாடிஇருக்க முடியாது.. “என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…” கவிஞர் தாமரையின் மனதை தொடும் பாடல் வரிகள்… எனக்கு மிகவும் பிடித்த சமீபத்திய திரைப்பட பாடல் இது. உங்களுக்கு? கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும்.

    Share

    ஒ சாந்தி சாந்தி – வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்

    மேலே இருக்கும் “ஒ சாந்தி சாந்தி” என்ற வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் என் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை, வீடியோ இரண்டும் ஒரிஜினல்… குரல் மட்டும் தான் என்னுடையது… கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும். :)

    Share