Archive for the கவிதைகள் Category

    மௌனக்கதறல்கள்

    work.2155729.3.flat,550x550,075,f.guilt-or-blaze-with-anger-burn-with-shame

    பெண்ணே!
    உன் செவியில் கேட்கிறதா?
    உன் விரல் படாத பூக்களின்
    மௌனக்கதறல்களை.

    பெண்ணே!
    உன் கண்ணில் தெரிகிறதா?
    உன் பாதம்படாத மண்துகள்களின்
    ஏக்கப்பெருமூச்சுகளை.

    பெண்ணே!
    உன் மனம் அறிகிறதா?
    உன் ஸ்பரிசம் படாத காற்றின்
    அழுகை அலைவரிசையை.

    பெண்ணே!
    உன் இதயம் புரிகிறதா?
    உன் பார்வைபடாத என் ஜீவனின்
    மரண அவஸ்தைகளை.

    பெண்ணே!
    உன் ஆறாம் அறிவு உணர்கிறதா?
    உன்னால் ஏங்கும் என் தேகத்தின்
    உயிர் கசிவுகளை!

    - பிரவீன் குமார்

    Share

    கி.பி 2020 – கவிதை

    Future India

    கதிரவன் பூமிக்கு கரம் தந்த நேரம்.
    இயந்திர வாழ்க்கை தொடங்குகிறது என்று
    அலாரம் அடிக்க தொடங்கியது.
    எழுந்ததும் படிக்கும் நாளிதழ் பழக்கம்
    இப்போது உருமாறி விட்டது என்பதினால்
    செய்தி காண கணினித்திரை விரிந்தது!

    செவ்வாய் கிரகத்தில் ஆராய்ந்து முடித்து
    பூமி திரும்புகிறான்  இந்தியன் என்றும்,
    வேலை தேடி இந்தியாவிற்கு
    படையெடுக்கும் அமெரிக்கர் என்றும்
    விரிந்து சென்றது இணையவலை.

    லஞ்சம் இல்லா அரசியலால்
    எதுவும் சாத்தியம் என்றேதான்
    நெஞ்சம் சொல்லியது என்னோடு
    அது உண்மையானது இன்றோடு.

    இந்த சந்தோஷ அலையில்
    மனம் பயணித்த வேளையில்
    ஏதோ ஞாபகம் வந்தது போல்
    இணையதளத்தை மாற்றினேன்.
    இந்தியாவின் தலைசிறந்த பள்ளியொன்றின்
    இணயதளம் தான் அது.

    என் மகனை அதில் சேர்க்க
    விண்ணப்ப படிவத்தை திறந்து பார்த்தேன்.
    பெயர்
    முகவரி
    புகைப்படமென்று
    நீண்டு சென்ற அதன் நடுவே,
    ஜா….தி நின்றது வெறியோடு
    அது இன்னும் அழியவில்லை மனிதச்சதையோடு!

    இரும்பாக இந்தியா மாறினாலும்
    துருவொன்று இருக்கத்தானே செய்யுமென்று
    மனதை தேற்றிய நேரத்தில்
    வெளியே யாரோ அழைப்பது கேட்டது.

    கதவை திறந்து நான் பார்த்தேன்
    ஒரு முறை தேற்றிய என்மனதை
    மறுமுறை தேற்ற முடியவில்லை.
    வெளியே
    திருவோட்டோடு பிச்சைக்காரன்!

    - பிரவீன் குமார் செ

    பி.கு: இது 2003ம் வருடம் நான் எழுதியது.. அதற்குள்ளே இதோ 2011 வந்துவிட்டது. நல்லவேளை 2020 வருவதற்குள் இதை பதிவித்துவிட்டேன்.

    Share

    எனக்குள்ளே குற்றஉணர்வு – கவிதை

     

    feeling-gulity-tamil-poem-by-praveen

    நான் எழுதுகிற கவிதைகள் யாவும்
    காதலை பற்றியே இருக்கிறதென
    உள்ளுக்குள்ளே குற்றஉணர்வு.

    எதை எதையோ எழுதிட
    எனக்கும் கூட ஆசைதான்.
    இருந்தும் தெரியவில்லை
    எதைப்பற்றி எழுதுவதென்று.

    நூலகம் சென்றேன்
    கவிதைகள் கற்க.
    பிரபலாமான கவிஞர்கள்
    பிரபலம் பெரும் கவிஞர்கள்
    வித விதமான கவிதை புத்தகங்கள்.
    வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது!

    தேடினேன்
    தேடினேன்
    நீண்ட நேர தேடலின் பயனாய்
    கிடைத்து விட்டது
    வைரமுத்துவின் கவிதை.

    அவர் கவிதைகளில் நான் பயணிக்க ஆரமித்தேன்.
    முடிவேயில்லாமல் சென்றது அவர் கற்பனைகள்!
    வரம் வாங்கித்தான் வந்திருக்கிறார் மனிதர்
    வைர வரிகளை படைத்திட!

    காதலை பற்றி எழுதிய கவிஞர்
    என் காதல் நரம்பினை தூன்டியே விட்டார்.
    விதவை பெண்ணின் கண்ணீர ஈரம்
    என்னில் காயாமல் இருந்தது சில நேரம்.

    ஏழைகளின் துயரங்கள்
    எனக்குள்ளேயும் எட்டிப்பார்த்தது.
    கிராமத்து வாழ்க்கையை
    நானும் வாழ்ந்தேன் சில கனம்.

    சில நேரம் அரசியல்வாதியானேன்.
    சில நேரம் ஆசிரியரானேன்.
    பல நேரம் குழந்தையானேன்.
    எதை படித்தேனோ
    அதை போலவே மாறினேன்!

    பயணம் முடிந்தது இனிதாய்.
    கவிதை எழுதும் திறனிலே
    பக்குவப்படதாய் உணர்ந்தேன்.
    காதலை தவிர மாற்றத்தையும்
    கவிதையாக்கும் முறையை அறிந்தேன்.

    வீட்டிற்கு சென்றேன்.
    மேஜை மேல் காகிதம் வைத்தேன்.
    காகிதம் மேல் பேனா வைத்தேன்.
    பேனா மேல் என் சிந்தையை வைத்தேன்.

    யோசித்தேன்…
    யோசித்தேன்…
    ஆழ்ந்து யோசித்தேன்….
    இருந்தும்
    காதலை தவிர
    கருமமும் வரவில்லை!

    Share

    நிலாப்பெண் – கவிதை

    the-girl-and-the-moon-girl-moon_big

    நிலவும் அழகுதான்
    அண்ணாந்து பார்த்து
    ரசிக்குமளவிற்கு.

    பார்த்தால் பக்கம்தான்
    நிஜமோ,
    தொடக்கைகள் நீண்டும்
    தொட்டுவிடா தொலைவிற்கு.

    தனிமையான இரவுப்பொழுதில்,
    நிலவே
    துணையாகிறது.

    கண்கள் காணக்கிடைத்தும்,
    சொந்தமில்லை என்பதே
    நிஜமாகிறது.

    உன்னை நிலவென்று ஒருமுறை
    கவிதை எழுதினேனே,
    இப்போது புரிகிறது
    நீ நிலவுதான்!

    Share

    தேர்வு – கவிதை

    exam-tamil-poem

    தேர்வு தொடங்கியது.
    கேள்வித்தாள் ஒருகையில்,
    பதில்தாள் மறுகையில்.

    கேள்வித்தாளை அனாதையாக்கினேன்
    பதில்தாளை மட்டும் தத்தெடுத்தேன்!

    பக்கம் பக்கமாய் எழுத ஆரமித்தேன்.
    ஒன்று
    இரண்டு
    முன்று
    .
    .
    .
    அடுக்கிக்கொண்டே போனேன்.

    தேர்வு நேரம் முடிந்தது.
    ஆசிரியர் ஆச்சர்யத்தோடு வாங்கினார்
    கட்டப்படாத என் ஒற்றை பதில்தாளை.

    பாவம்!
    அவருக்கு தெரியாது
    என் பாக்கட்டில் மீதமுள்ள
    நான் எழுதிய கவிதை தாள்களை!

    பாவம்!
    யாருக்கும் தெரியாது,
    கடைசி வரை அந்த கேள்வித்தாள்
    என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!

    Share

    விடையில்லா தேடல்

    தேடினேன்
    தேடினேன்
    நீண்ட நாட்களாய் தேடினேன்
    கிடைக்கவில்லை!

    தொலைந்த இடம்
    தெரியவில்லை.
    தொலைத்த இடம்
    தெரியவில்லை.
    அட
    இதயம் கூடவா
    திருட்டு போகும்!

    ஆனால்
    அதை திருடியது அவளென்றறிந்து
    என் இதயம் திரும்பக்கேட்டேன்.
    மறுத்துவிட்டாள்.

    சரி,
    என் இதயம் தான் கிடைக்கவில்லை,
    அவள் இதயமாவது கிடைக்குமென்று
    தேடினேன்.
    தேடினேன்.
    அதுவும்,
    கிடைக்கவில்லை.

    அடிப்பாவி!
    உனக்கு இதயமே இல்லையா!

    - பிரவீன் குமார் செ

    Share

    சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

    உயிரெழுத்து நீயானாய்.
    மெய்யெழுத்து நானானேன்.
    இருவரும் சேர்ந்தோம்,
    உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
    அதனால் தானோ,
    ஆய்(யு)த எழுத்தாய்
    உன் அப்பா!

    ——————————————————————————————-

    வாழ்வு முழுவதும் சுகம் தர,
    தாசி வாங்கும் பணம் போலே,
    வரதட்சணை.

    ——————————————————————————————-

    இடியை பார்த்து
    நடுங்காத இந்த நெஞ்சம்
    உன் இடையை பார்த்ததும்…..

    ——————————————————————————————-

    மனம் ஒரு குரங்குதான்.
    உன்னை மறக்க நினைக்கும் என் மனம்
    உன் நினைவுகளையும் நினைக்க
    மறப்பதில்லையே.

    ——————————————————————————————-

    என்னுயிர்
    உன்னுயிரோடு
    உறவாடி
    உயிர்தருகிறது
    ஓர் உயிர்க்கு.

    ——————————————————————————————-

    நீ என்னிடம்
    கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
    கனவு கூட கனவாகியே போனது

    ——————————————————————————————-

    நான் தினமும்
    ரத்ததானம் செய்கிறேன்
    கொசுக்கடி .

    ——————————————————————————————-

    சிதைந்த சூரியன்
    உடைந்த வெண்ணிலா
    உதிர்ந்த விண்மீன்
    நனைந்த மேகம்
    இவை அனைத்தும்
    வானில் சாத்தியமென்றால்
    என் வாழ்வில்
    அவளும் சாத்தியம்

    ——————————————————————————————-

    ஆசிரியப்பா தெரியாது
    வெண்பா தெரியாது
    எதுகை மோனை தெரியாது
    மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
    இருந்தும் காதலித்துப்பார்
    உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.

    ——————————————————————————————-

    உன் கூந்தலில் குடியேற
    வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
    தற்கொலை செய்தன
    தரையில் குதித்து

    ——————————————————————————————-

    உடலை
    உயிர் பிரிந்ததும்
    எரிப்பது வழக்கம்

    நீ
    என்னை பிரிந்தும்
    நான் இன்னும் பிணமாய்,,,,

    ——————————————————————————————-

    உள்ளத்திற்கும்
    உணர்வுகளுக்கும்
    ஏற்பட்ட உறவினால்
    கற்பமில்லாமல் பிரசவிக்கிறது
    என் கவிதை

    ——————————————————————————————-

    Share

    சிறு (சினிமாக்) கவிதைகள் – தொகுப்பு மூன்று

    நானெழுதிய மற்ற சிறுகவிதைகளை போலில்லாமல் இதில் தமிழ் சினிமா பெயர்கள் முடிவடையுமாறு ஒரு சிறு முயற்சி.  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    எரிமலையை கூட
    பனிமலையாக மாற்றும்
    உன் பார்வையை தரிசிக்க
    பாதையில் காத்திருக்கிறேன்
    நீ வருவாயென.

    ——————————————————————————————-

    அந்திசாயும் ஒரு மாலையிலே,
    நாம் காதல் புரிந்த வேளையிலே,
    முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
    நினைத்துக்கூட பார்த்ததில்லை,
    உன்னை முதலாய்
    சந்தித்த வேளையிலே.

    ——————————————————————————————-
    ஆக்ராவில் இல்லையென்றாலும்,
    என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
    நானும்
    ஷாஜஹான்.

    ——————————————————————————————-

    காதல் கொண்டேன்.
    கவிஞனானேன்.

    ——————————————————————————————-

    காதல் கொண்டேன்
    கண்ணீர கொண்டேன்.

    ——————————————————————————————-

    பார்வைகளில் நீயெனை உரசிட
    பற்றியெரியும் காதல் தீ
    அனையும் முன்,
    உன்னைக்கொடு என்னை தருவேன்.

    ——————————————————————————————-

    நந்தவனத்தில் தொலைந்த
    பூக்களெல்லாம் புடைசூழ
    நடக்கிறதோர்
    பூமகள் ஊர்வலம்.

    ——————————————————————————————-

    மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
    தனிமை என்னை பாடாய் படுத்த,
    உன் ஈரச்சேலை என்னுள் தீயை மூட்ட,
    முத்தமிட்டு அதை நீ அனைத்ததை
    மறக்கமாட்டேனென்
    நினைவிருக்கும் வரை.

    ——————————————————————————————-

    புகைப்பதை நிறுத்தச்சொல்லி
    நீ என்னுடன் பகை கொண்டபோது
    உடனே நானதை நிறுத்தினேனே,
    அது உனக்கு உணர்த்தியிருக்கும்
    நான் செய்தது
    காதலுக்கு மரியாதை.

    ——————————————————————————————-

    நான் மறக்கச்சொல்லியும்
    மறுக்கிறதென் இதயம்
    துடிப்பதற்கு,
    பூவே உனக்காக.

    ——————————————————————————————-

    வழக்கமான இரவென்றாலும்,
    வழக்கமான ஆசைகளோடு,
    இன்றும் போர்வைக்குள் பதுங்கினேன்.
    என்னை நனவில் காதலிக்காத நீ,
    கனவிலாவது காதலிக்க வருவாய்
    என்ற ஆசையுடன் கண்களை மூடி
    நினைத்தேன் வந்தாய்.

    ——————————————————————————————-

    ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
    ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
    என்றும் இருப்பேன்
    ப்ரியமுடன்.

    ——————————————————————————————-

    கஷ்டமான காலங்களில்
    மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
    நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
    உன் புன்னகையை
    பார்த்தாலே பரவசம்.

    ——————————————————————————————-

    பிடியின்றி விழுந்த குழி
    புதைக்குழி என்றறிந்தும்
    உன் இதயக்குழி என்பதால்
    எழுந்துவர மனமில்லையென்
    ப்ரியமானவளே.

    ——————————————————————————————-

    என் உயிரைக் கொல்லாமல்
    உடலில் மின்சாரம் பாய்கிறது நீயென்
    கன்னத்தில் முத்தமிட்டால்.

    ——————————————————————————————-

    கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத,
    காலில் விழுந்தும் கிடைக்காத,
    காதலியின் முத்தம்
    எதிர்பாராமல் கிடைத்தால்
    துள்ளாத மனமும் துள்ளும்.

    ——————————————————————————————-

    ஆண்களின் இதயங்கள் எரிக்கப்பட
    பெட்ரோல் தேவையில்லை.
    தீ கூட தேவையில்லை.
    பெண்களின்
    பார்வை ஒன்றே போதுமே.

    ——————————————————————————————-

    தோற்றம்: http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-three

    Share

    பெண் சிசுக்கொலை

    பசித்தழுகிறது பச்சிளங்குழந்தை.
    அறுந்து விழாத தொப்புள் கொடியை
    பார்க்கும் கண்கள் சொல்லிவிடும்
    புதியதாய் பிறந்த குழந்தையென்று.

    அழுகுரல் கேட்டுணர்ந்து வந்த தாய்
    குழந்தையை மடியினில் வைத்து
    ஊட்டினாள் புட்டிப்பாலை.

    பசியடங்கி படுத்துறங்கிய குழந்தையைக்கண்டு
    கண்ணீரோடு கீழே ஊற்றினாள்
    மீதமிருந்த கள்ளிப்பாலை.

    உடையில்லா உடலைக்கண்டு
    உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
    கொல்லப்பட்டது பெண்பாலை!

    Share

    சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு

    பெண்கள் பூவென்றிருந்தேன்
    என் இதயம் குத்தப்படும் வரை.

    ரோஜாவை அழகாக படைத்தவன்
    முள்ளையும் மறக்கவில்லை!

    ——————————————————————————————-

    காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
    காவிரியில் தண்ணீர் இல்லையாம்
    கண்ணீராவது ஓடட்டும்!

    ——————————————————————————————-

    தமிழ்நாட்டிற்கு
    புதிய மின்சார விநியோகம்
    உன் விழிகளிலிருந்து!

    ——————————————————————————————-

    நான் தவமிருந்தது உண்மைதான்
    உன் வரம் கிடைக்குமென!

    சாபம் கொடுத்துவிட்டாயே
    கடைசிவரை கண்ணீரென!

    ——————————————————————————————-

    உனக்கும்
    நல்ல மனதுதான்
    உன் நினைவுகளையாவது
    காதலிக்க விட்டாயே…

    ——————————————————————————————-

    தடுக்கித்தான் விழுந்தேன்.
    அவள் நெஞ்சம்,
    புதைக்குழி என்றறியாமல்….

    ——————————————————————————————-
    தாடி கூட,
    சரியாக முளைக்கவில்லை,
    தேவதாஸ் ஆகிட!

    ——————————————————————————————-

    தமிழ்நாட்டில்,
    மின்சார தட்டுப்பாடு
    அவள் கண் சிமிட்டும்போது.

    ——————————————————————————————-

    விடியும் என்றுதான்
    தினமும் உறங்குகிறேன்!

    ——————————————————————————————-

    மின்னி மின்னி
    மறையும் மின்மினிப்பூச்சி
    உன் விழி!

    ——————————————————————————————-
    நீ தீண்டினாலும்
    சுகம்தான்!
    திட்டினாலும்
    சுகம்தான்!

    ——————————————————————————————-

    காதல் வலையே
    பிடியில்லாமல் விழுந்துவிட்டேன்
    என்று பீற்றிக்கொள்ளாதே
    அவளை
    பிடித்துத்தான் விழுந்தேன்

    ——————————————————————————————-

    என் இதயமாளிகையில்
    இருக்கும் என்னவளுக்கு
    மூச்சு திணறுகிறதாம்
    புகைப்பதை நிறுத்திவிடுகிறேன்!

    - பிரவீன் குமார் செ

    http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-two

    Share
←Older