சமீபத்தில் சேலத்தில் யாரும் இப்படி ஒரு மழையை பார்த்து இருக்க முடியாதென்று நினைக்கிறன். இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்குமிடத்திலேயே சிறைபிடித்து வைத்துக்கொண்டது. வீட்டில் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளேயும், கடைக்கு சென்றவர்கள் கடைக்குள்ளேயும் சில மணி நேரம் முடங்கி கிடக்க வேண்டியதாயிற்று.
நேற்று மாலை நான் ஏர்டெல் அங்காடிக்கு சென்று இருந்ததால் அங்கேயே மாட்டிக்கொண்டேன்.. இல்லை… தப்பித்து கொண்டேன் என்றே சொல்லலாம். பேய்மழைனு சொல்லுவாங்களே. அது போல இது குட்டி சாத்தான் மழைன்னு நினைக்கிறன். இரண்டு மணி நேரமே பேய்ந்தாலும் ஒரு கலக்கு கலக்கிடுச்சு. மழை நிற்கும் வரை கண்ணாடி சுவர் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே நேரத்தை கடக்க வேண்டியதாயிற்று.
பிறகு தான் தெரிந்தது மழையின் தாக்கம் .. தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டு மாடி அறையில் பதிக்கப்பட்ட ஆஸ்புஸ்தாஸ் சீட் பக்கத்துக்கு வீட்டுக்கு பறந்து போயிடிச்சாம்… இன்னொருத்தங்க மாடியில காயப்போட்டிருந்த துணி மணி எல்லாம் எங்க போச்சுனே தெரியலயாம். அடுத்தநாள் சிலது மட்டும் பக்கத்துக்கு தெருவில் கிடைத்ததாக தகவல். அப்போ மீதி? ”போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணுங்கோ மாமி.. கண்டுபிடிச்சு கொடுப்பாங்க..”
இது நடந்தது நேற்று.. . இன்னைக்கும் அதே மாதிரி சாயங்கால நேரம். ஆறு மணி அளவிலேயே இருட்டிடுச்சு.. பயங்கர காற்று.. சரியாய் சொல்லனும்னா பி.சி.ஸ்ரீராம் படத்துல வர காட்சி மாதிரி இருந்துச்சு.. வெளியே போய் மாட்டிக்க கூடாதுன்னு உள் மனசு சொல்லுது.. வீட்டில் வேற யாரும் இல்ல. கரண்ட் காட்டானால் மாட்டிக்குவமேனு நினைக்கறதுக்குள்ளே.. டப்… கரண்ட் போயுடுச்சு..
நான்.. என் லேப்டாப்.. இன்னும் சிறிது நொடியில் உயிரிழக்க போகும் வைபை(Wi-Fi) இணைய தொடர்பு.. பீப்.. பீப்.. பீப். ஐந்து நிமிடம் “யுபிஎஸ்” கத்தி ஓய்ந்தது… இணையம் துண்டிக்கப்பட்டது. வீட்டிலேயே தனிமைசிறை… யாரும் இல்லையே என்ன செய்ய? வீடு வேறு ஒரே இருட்டாக இருக்கிறது. கதவை திறந்து வெளியே போகலாம் என்றால்,, ம்ம்ம்.. வெளியே கொஞ்ச நஞ்ச காற்றா? மழையை ரசிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லையே..
ஆங். ஐடியா.. “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது…” மெல்லிய சப்தத்தில் என் லாப்டாப்பில் இசைவித்தேன்.. கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் ரசித்து கேட்கும் வாமணன் திரைப்பட பாடல்.. இருள் சூழ்ந்த அறை.. தனிமை.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அந்த பாடல் இப்போது சற்று மேலும் மனதை வருடுகிறது..
நான் புதிதாக வாங்கிய என் கம்பியில்லா பிராட் பான்ட் இணைப்பு கருவியை(EV-DO Broadband Wireless Terminal) லேப்டாப் பில் சொருகி இணையதொடர்பு ஏற்படுத்திக்கொள்ள பார்த்தேன்.. கன மழையால் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருட்டில் ஒவ்வொரு அறை ஜன்னலிலும் லாப்டாப்பை தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்து ஊர்ந்து சென்றேன்.. விளக்கு வேறு பற்ற வைக்கவில்லை. ஒரே இருட்டு வேறு. ஒரு இடத்தில் மட்டும் கொஞ்சம் சிக்னல் கிடைத்தது.. சிறிய அளவில் ஜன்னலை திறந்து அருகிலேயே அமர்ந்து இணையத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்..
பிறகு என்ன? என்னதான் மழை பெய்தாலும்.. கரண்ட் கட்டானாலும்.. டெக்னாலஜி இருக்கு மாமே.. டெக்னாலஜி.. மனதிற்குள்ளே சொல்லிகொண்டே நான் என்னுடைய ப்ரொஜெக்டை தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தேன்.. சுமார் அரைமணி நேரம் இருக்கும். மழை தண்ணீரில் காலை வைத்தது போல் ஜில்லென்று இருந்தது.. நான் கண்டுகொள்ளவில்லை.. மேலும் சில நிமிடங்கள் சென்று இருந்த வேலையில் என் கால்சட்டையும் நனைந்தது போல் ஒரு உணர்வு.. குனிந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. அட என்னப்பா இது.. ஒன்றும் விளங்கவில்லையே.. கரண்ட் வரட்டும் பார்போம் என உள்மனது சொல்லியது…
கரண்ட் வந்தது.. ஆச்சர்யம் குறையாமல் கீழே குனிந்து பார்த்தேன். குட்டை போல் வீட்டின் ஒரு பகுதியே தண்ணீர் சேர்ந்துள்ளது.. ஆ.. ஆ .. எப்படி அது? மேல பார்த்தேன்.. கீழே பார்த்தேன்.. அட… கடவுளே.. இன்டர்நெட் சிக்னலுக்காக ஆர்வத்தில் ஜன்னலை சிறிது திறந்திருக்கிறேன்.. அது மெல்ல மெல்ல சத்தமில்லாமல் வீட்டை குளமாக்கிக்கொண்டு இருந்திருக்கிறது.. ஹய்யோ பிரவீன்… இப்படி சொதபிட்டயேடா? கம்முனு நல்லபிள்ளையா தூங்கி இருக்கலாமேடா.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது.
பின் குறிப்பு : இந்த இடுக்கை தலைப்பின் அர்த்தம் இப்போது புரியுமே… 🙂
நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்.. 2006 ஆம் வருடம் அணைத்து இளவட்டங்களையும் கட்டிப்போட்ட சில்லுனு ஒரு காதல் திரைப்பட பாடல்.. கவிஞர் வாலியின் உடலிற்கு தான் வயதானதே தவிர அவருடைய சிந்தனையும், மனதும் எப்போதுமே இளமை தான்… அதற்கு உதாரணம் தான் இந்த பாடல்..
இப்பாடலை பாடுவதற்கு பாடகரை தேர்வு செய்வதற்கு முன்னர், டைரக்டரிடம் காண்பிப்பதற்காக தானே டம்மியாக பாடி பதிவு செய்தார் ஏஆர். ரஹ்மான். பிறகு அனைவரும் கேட்டுக்கொண்டதால் அவர் குரலிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது.. எந்த பாடகருக்கு அந்த வாய்ப்பு சென்றிகுமோ தெரியாது. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் குரலை எடுத்துவிட்டு என்னுடைய குரல் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை தோன்றியது… ஹா ஹா ஹா… அதன் முயற்சி தான் இந்த வீடியோ… அவரின் ஹை பிச் குரல் சில இடங்களில் எனக்கு வரவில்லை. கண்டுபிடித்து சொல்லுபவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய ஆஸ்கார் விருது இலவசமாக தரப்படும்.. (புகைப்பட வடிவில்).. ஹி ஹீ ஹீ 🙂
[xr_video id=”fac290918ec14ba0996e4c012bbd15e8″ size=”md”]
இதோ போனஸாக அதன் பாடல் வரிகளும்….
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது .. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ….. கொடுமை கொடுமையோ….
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது.. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ… கொடுமை கொடுமையோ….
பேச்செல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை அதை எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனது ஏனோ
வான் இங்கே நீளம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது
நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிக்கட்டி போல மாறுமே
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பணியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
நேற்று அயன் திரைப்படம் இரவு காட்சிக்கு சென்று இருந்தேன் (தோம்). எதிர்பாராவிதமாக நாங்கள் செல்வதற்குள் பத்து நிமிடம் படம் ஓடி இருந்தது.. இருந்தால் என்ன? தமிழ் படத்தின் கதை புரியாமலா போய்விடபோகிறது என்று பார்க்க ஆரமித்தேன். வழக்கம் போல் சூர்யா சூப்பர்.. மேலும் மேலும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது நடிப்பும், அழகும்.. அட.. தமனாவும் தான்பா நடிக்க ஆரம்பித்துவிட்டது….
“நெஞ்சே… நெஞ்சே…” , ”விழி மூடி யோசித்தால்..” பாடலும் அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக இருக்கும்.. ஆனால் ”நெஞ்சே… நெஞ்சே…” பாடல் படமாக்கப்பட்ட அந்த ஆப்ரிக்க பாலைவனம் ஹிந்தி கஜினியில் ஏற்கனவே பார்த்து விட்டதால் புதுமையாக தெரியவில்லை. ஹிந்தி கஜினியை விட தமிழில் தான் அற்புதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். என்னுடைய மொபைல் ஹலோ டுயுன் இப்போது அந்த பாடல் தான் .. பின்னணி இசையும் அருமை.. ஹாரிஸ் ஜெயராஜை பத்தி சொல்லவா வேண்டும்?

சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு கண்டிப்பாக அனைவரையும் பிரமிக்கவைக்கும்.. ஆப்ரிக்கா அந்த மலைப்பாதை காட்சிகளும், மலேசியா கார் துரத்தும் காட்சிகளும் கண்டிப்பாக தமிழுக்கு புதுசு.. கதை என்னவென்றால், நம்ம சூர்யா ஒரு ஹைடெக் கடத்தல்காரன்.. பிரபு நம்ம சூர்யாவுக்கு பாஸ். விஜய் தொலைக்காட்சிகளில் வரும் அந்த நபர்(மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை) சூர்யாவின் நண்பர். தமன்னா அவரின் தங்கை. தொழில் போட்டியில் பிரபு சாகிறார்.. சூர்யா வில்லனை பழி வாங்குகிறார்.. கடத்தலை விட்டு விட்டு திருந்துகிறார். கடைசியில் கஸ்டம்ஸ் ஆபிசர் ஆகிறார்.. மறக்காமல் தமன்னாவை கைபுடிக்கிறார்.
உலகில் இருக்கும் அணைத்து பெரிய கடதல்கார்களும் பிரபுவுக்கு பழக்கம்.. ஆப்ரிக்கா மலைபகுதிகளில் வாழும் ”மம்போ” என்ற யாரும் நெருங்க முடியாத ஒரு அதிபயங்கர கடத்தல்காரராக காண்பிக்கபடுபவர்கூட நம்ம பிரபுவுக்கு பழக்கமாம். பிரபுவை பார்த்தால் அப்படி கண்டிப்பாக தெரியாது.. முன்னொரு காலத்தில் பெரிய தாதாவாக இருந்தாரம். படத்தில் பிளாஷ் பாக் காட்சிகள் கூட இல்லாததால் நம்ம பிரபு ஒரு காமெடி தாதாவாகவே வலம் வருகிறார்.. அவருக்கு கைபுல்லையாக நம்ம சூர்யா தம்பி.. அங்கேயே எனக்கு படத்தின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது..

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் சூர்யா, ஆப்பிள் ஐ போன் வைத்து இருக்கிறார், ஆப்பிள் மாக் லேப்டாப் வைத்து இருக்கிறார் , நினைத்தால் வெளிநாடு கிளம்புகிறார், கூகிள் இணையத்தளத்தில் கடத்தல் செய்யும் டெக்னிக்குகளை கண்டுபிடிக்கிறார்.. எல்லாம் பண்றார்.. அப்புறம் எதற்கு பிரபுவுக்கு கைபுல்லையாக? பெருசா காரணம் இல்லையே? சூர்யாவின் நண்பராக வரும் அந்த கதாபாத்திரம் எரிச்சலோ எரிச்சல்.. (நல்ல வேலை பாதியிலேயே அவர் இறந்து விடுவதால் பார்வையாளர்கள் தப்பித்து கொண்டார்கள்).. தங்கை தமன்னா சூர்யாவை காதலிக்க வைக்க அவர் பேசும் வசனங்கள், செயல்கள் அருவருப்பு. கிரி படத்தில் வடிவேலு சொல்லும் ”பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது” ரகம்.. அது காமெடி..ஆனா இது அருவருப்பு.. தங்கச்சிய பத்தி எந்த அண்ணன் இப்படி பேசுவான்? அது மட்டும் இல்லாமல்.. படத்தில் ரசிக்க முடியாத பல இரட்டை அர்த்த வசனங்கள் நம்ம சூர்யா பேசுகிறார். கொடுமை..
அருமையான கதைக்களம், நடிப்பில் மெருகேறிய சூர்யா, அழகிய தமன்னா, பிரமிக்க வைக்கும் சண்டைகாட்சிகள், தமிழுக்கு புதிய வெளிநாட்டு படபிடிப்பு இடங்கள்…. இவை அனைத்தும் இருந்தும் திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனங்கள் இல்லையே டைரக்டர் ஆனந்த் சார். இப்படி துட்ட விரயம் பண்ணிடீன்களே? பேசாமல் நம்ம எழுத்தாளர் சுபா எழுதிய இந்த கதையை நாவலாக பிரசுரம் செய்து இருந்தால்.. ஏ.வீ .எம் மின் பணம் மிச்சம். நீங்க என்ன சொல்றீங்க? படம் நல்ல இருக்கா, நல்லா இல்லையா? உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது எதை வேண்டுமானாலும் கீழே பதிவு செய்யவும்.
இதோ மேலும் சில பேர் அயன் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு இருக்காங்க.
ஆனா அந்த அளவுக்கு படம் மோசமில்லைன்னு நினைக்கிறன்..
April 5th, 2009 in
சினிமா | tags:
அயன்,
சினிமா,
சூர்யா |
4 Comments
நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதுகிறேன். தீபாவளி திரைப்படத்தில் வரும் “போகாதே போகாதே” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.. நான் அதிகம் கேட்பதும், அதிகம் முனுமுனுப்பதும் இந்த பாடல்தான்.. ஒரு ”ஆர்வத்தில்” நானே பாடி, பதிவு செய்து, கேட்டு பார்த்தேன்.. நான்றாக இருந்தது போல் தோன்றியதால் இதோ என் வலை பதிவின் மூலம் இணையத்தில் உலா வரச்செய்கிறேன்… ஹீ ஹீ ஹீ
சென்ற வருடமே என் குரலில் நான் பதிவு செய்த இந்த பாடல், நேற்று தான் வீடியோவில் புகுத்தி யூடுபில் ஏற்றினேன்.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். இந்த பாடலை திரையில் பின்னணியில் பாடிய யுவன் ஷங்கர் ராஜாவை விட சூப்பர் என்று எழுதி காமெடி கீமடி பண்ண கூடாது.. ஆமா.. சொல்லிட்டேன்.. 🙂
[xr_video id=”5ffc6630ec0646b9a27e7e0594ccb6c8″ size=”md”]
இதோ போனஸ் ஆக அதன் பாடல் வரிகளும்…
போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.
உன்னோடு வாழ்ந்த… காலங்கள் யாவும்… கனவாய் என்னை மூடுதடி…
யாறென்று நீயும்… என்னை பார்க்கும் போது… உயிரே உயிர் போகுதடி….
கல்லறையில் கூட… ஜன்னல் ஒன்று வைத்து… உந்தன் முகம் பார்ப்பேனடி…
போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்.
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்.
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு.
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு..
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….
போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்.
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்.
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே.
பெண்ணே நீ இல்லாமல்… பூலோகம் இருண்டதடி
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

தமிழா தமிழா நாளை நம் நாளே….
தமிழா தமிழா நாடும் நம் நாடே…..
என்று தன் இசைபயனத்தை ஆரம்பம் செய்த இசைப்புயல் ரஹ்மான் இன்று அதை நிருபித்துள்ளார். இன்றும் இந்திய சினமாவிற்கு வெறும் கனவாகவே இருந்த ஆஸ்கார் விருதிதினை ஒன்று அல்ல இரண்டை பெற்று தந்த அந்த ஆஸ்கார் தமிழனின் புகழை சொல்ல வார்த்தை இல்லை.. ஆஸ்கார் மேடையில், அதுவும் தமிழில் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று தமிழில் கூறிய அந்த மாமனிதனை உளமார வாழ்த்துகிறேன்.
February 26th, 2009 in
சினிமா | tags:
ஆஸ்கார்,
ரஹ்மான் |
2 Comments