Posts Tagged கவிதை

    காதல் யுத்தம்

    • உன்னை நினைக்கும் போதெல்லாம்
      என் நினைவுகள்
      நினைவிழக்கிறது!
    • உறங்கச்சென்றால்smoking-lover
      கண்கள்
      ஒத்துழையாமை செய்கிறது!
    • உண்ணசென்றால்
      வயிறு
      உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
    • மூளை
      மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
      வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
    • மொத்தத்தில்,
      உன்னால்
      என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
    • ஒவ்வொருமுறையும்,
      கண்ணீர் புகையை வீசியே
      இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
    • ஆம்.
      கண்ணீரோடு
      என் நுரையீரலில் புகையை வீசியே!!!

    – பிரவீன் குமார் செ

    கண்ணீர் இருப்பில்லை – சுனாமி கவிதை

    சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு என் மனம் பாதிக்கப்பட்டபோது எழுதிய வரிகள்…

    tsunami-pain-peom

    கண்ணீர் இருப்பில்லை

    அலைகடலே
    உன் கரையில் விளையாடியது குற்றமென
    பிஞ்சுகளின்
    உயிரோடு விளையாடிவிட்டாய்.

    உன் மடியில்
    வலை வீசியது குற்றமென
    மீனவர்களின்
    உயிரை விலை பேசிவிட்டாய் .

    குழந்தைகளை பிரித்து
    பெற்றோர்களை அனாதயாக்கினாய்
    பெற்றோரை பிரித்து
    குழந்தைகளை அனாதயாக்கினாய்.

    இன்னும்
    யாரை பிரிக்க
    அலை அலையாய்
    அலைந்துகொண்டு இருக்கிறாய்?

    இங்கு இறப்பதற்கு
    இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம்
    இறந்த பின் சிந்துவதற்கு
    கண்ணீர் தான் இருப்பில்லை…

    – பிரவீன் குமார் செ

    மனிதமுயற்சி

    நெய்வேலி புத்தக கண்காட்சி 2004 லில் பரிசு பெற்று “நெய்வேலி கவிஞர்கள்” எனும் கவிதை தொகுப்பில் பிரசுரமான என் கவிதை. நெய்வேலி நூலகத்தில் புத்தகம் வைக்கப்பட்டு எனக்கு முதன் முதலில் அங்கிகாரம் பெற்று தந்த கவிதையிது. கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறன். நான் எப்பொழுதும் புத்தக புழுவாக வுர்ந்து கொண்டிருந்த நெய்வேலி நூலகத்தில் என் கவிதை இருந்தது ஒரு பெருமைக்குரிய விசயமாக கருதுகிறேன்..

    human-try

    மனிதமுயற்சி

    • நிலவு சொந்தமில்லை
      இருந்தும் கையை நீட்டியவாறு
      சிறு குழந்தை…
    • கூந்தல் சொந்தமில்லை
      இருந்தும் மலர்ந்து கொண்டேயிருக்கும்
      காகிதப்பூ..
    • மழைத்துளி சொந்தமில்லை
      இருந்தும்  நம்பிக்கையுடன் வானம் பார்க்கும்
      பாலைவன கள்ளிச்செடி..
    • நாளை சொந்தமில்லை
      இருந்தும் முயற்சியுடன்
      மனிதன்….

    – பிரவீன் குமார் செ

   Newer→