Posts Tagged என் குரல்

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது – என் குரலில்

    இளையராஜா இசையில் “நீ தானே என் பொன் வசந்தம்” படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது” பாடல்.. இதோ என் குரலில் ஒரு முயற்சி…

    இன்னும் பாடல் வெளியீடு நிகழாத சூழலில், இணையத்தில் ஒரு நிமிட டீசராக வெளியாகி உள்ள இந்த பாடல் ஏனோ  கடந்த இரண்டு நாட்களாக என் நினைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்துக்கொண்டு கொண்டு இருக்கிறது.  என் குரலில் முடிந்தவரை அதை ஜஸ்டிபை செய்து பாடி இருக்கிறேன் என எண்ணுகிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

     

     

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது….
    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
    சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…
    விழியோடு விழி பேச…
    விரலோடு விரல் பேச…
    அடடா வேறு என்ன பேச….

    சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே…
    சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே…

    Movie: Nee Thaane En Pon Vasantham
    Song: Saindhu Saindhu Nee Paarkum Pothu
    Music: Ilayaraja

    கனவே கலைகிறதே பாடல் – என் குரலில்

    பலர் கேட்டுக்கொண்டும் மீண்டு வரமுடியாமல்…. இதோ மீண்டும் யுவன் பாடல்… என் குரலில்…

    பாடல்: கனவே கலைகிறதே.
    படம்: அழகாய் இருக்கிறாய்.. பயமாய் இருக்கிறது….

    கனவே கலைகிறதே
    காற்றென வலிகள் நுழைகிறதே
    தேவதை
    சிறகில் இறகாய் உயிரும் உதிர்க்கிறதே ஏய்
    காதல் இது தானா
    உலகெல்லாம்
    வலிகள் பொது தானா
    மனசுக்குள்
    அணில் பிள்ளை போல
    அழுவதும் அது தானா
    வார்த்தைகளை
    மௌனம் கொன்று தின்றதில்
    தனிமையிலே
    தினம் கத்தி கத்தி
    உந்தன் பெயர் சொல்லி அழுதேனே
    காற்று வந்து காதல் சொன்னதா

    இதுதானா காதல் இதுதானா
    வேர் அறுந்து வீசும் புயல் தானா
    உதுதானா காதல் இதுதானா
    அணு அணுவாய் சாகும் வழி தானா
    (கனவே..)

    அழைப்பது காணல் நீரா
    அறியாது பறவை கூட்டம்
    தொடுவானம் போலே காதல்
    அழகான மாய தோற்றம்
    உனக்கான வார்த்தை தனி
    ஆயுள் சிறையில் வாழ்கிறதே
    நமக்கென விண்மீன்
    நீ அறியும் முன்பே உதிர்கிறதே
    தரையில் மோதி மழைத்துளி சாகும்
    விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
    வலிக்கின்ற போதும் சிரிக்கின்ற நானும்
    உனக்காக நாளும் தேய்கிறேன்

    சரிதானா காதல் பிழைதானா
    ஆயுள் வரை தொடரும் வலிதானா
    இதுதானா காதல் இதுதானா
    ஐம்புலனில் ஐயோ தீயானாள்

    மழை நீர் சுடுகிறதே
    மனசுக்குள்
    அணில் பிள்ளை அழுகிறதே
    தேவதை சிறகில் இறகாய்
    உயிரும் உதிர்கிறதே

    ஒரு நாளில் வாழ்க்கை – புதுப்பேட்டை பட பாடல் என் குரலில்

    நான் உடைந்து போகும் நேரம் எல்லாம் அடிக்கடி கேட்க்கும் பாடல் இது. செல்வராகவன் வரிகளில், யுவனின் இசையிலும் குரலிலும் மனதை உருக்கும் இந்த பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரிட். இதோ என் குரலில் ஒரு முயற்சி.

    ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
    மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
    எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
    அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
    ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
    ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
    ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
    ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
    ஓஓஓஓஓஓ …

    போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
    காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
    இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
    நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
    தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
    கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
    எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
    ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
    ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
    ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
    ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
    ஓஓஓஓஓஓ …

    அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
    அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
    உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
    நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
    பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
    உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
    நடப்பவை
    நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
    ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
    ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
    ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
    ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
    ஓஓஓஓஓஓ …

    தெய்வம் வாழ்வது எங்கே – வானம் திரைப்பட பாடல் என் குரலில்

    வானம் திரைப்படத்திற்கு நா.முத்துக்குமார்அவர்கள் எழுதி யுவன் பாடிய பாடல் இது..  என் குரலில் ஒரு முயற்சி.. கேட்டுவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

    தெய்வம் வாழ்வது எங்கே,
    தெய்வம் வாழ்வது எங்கே
    தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
    காதலினால் மூடிவிட்ட,
    கண்கள் இன்று திறக்கிறது..
    திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..

    தெய்வம் வாழ்வது எங்கே,
    தெய்வம் வாழ்வது எங்கே
    தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்..
    காதலினால் மூடிவிட்ட,
    கண்கள் இன்று திறக்கிறது..
    திறந்தவுடன் வழியுது கொஞ்சம் கண்ணீர்..

    அடுத்தவன் கண்ணில் இன்பம்..
    காண்பதும் காதல் தான்..
    இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம்.. ஒ..
    தனக்காக வாழ்வதா வாழ்க்கை..
    விதி ஈரமற்று தந்த போக்கை..
    இவன் பாவம் கங்கையில் தீர.
    இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும் வணங்கும் தெய்வம் எங்கே..
    நாளும்.. நாளும்..

    என் காதல் சொல்ல நேரமில்லை

    பையா திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடல் “என் காதல் சொல்ல நேரமில்லை”. மிகவும் அருமையான மெலோடி. எத்தனை முறை எழுதினாலும் நா.முத்துக்குமாருக்கு காதல் பற்றி எழுதுவதில் சலிக்கவில்லை போலும். இந்த பாடலின் மிகப்பெரிய பலம் அவருடைய எழுத்துக்கள் தான். தற்போது வந்த பாடல்களில் மிகவும் ரசிக்கப்படும் பாடல் இது. சில பாடல்கள் பார்ப்பதை விட கேட்பதற்கு தான் நன்றாக இருக்கும். அந்த வரிசையில் இந்த பாடலும் ஒன்று. இந்த பாடலை நான் ஒரு முறை தான் பார்த்து இருக்கிறேன் அதுவும்  திரையரங்கில் இத்திரைப்படத்தை கண்டபோது ஆனால் இந்த பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டு இருக்கிறேன். யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடலில் என்ன விசேஷம் என்றால் யார் வேண்டுமானாலும் அதை சுலபமாக பாடும் படி இசையமைத்து இருப்பார். மிகவும் பிடித்த பாடலை யாராலும் முணுமுணுக்காமல் இருக்க முடியாது. இதோ நானும் முயற்சி செய்து இருக்கிறேன். கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே பதியவும்.

    [xr_video id=”563a010c50404866a029e338630bdf7d” size=”md”]

    இதோ போனசாக அதன் பாடல் வரிகளும்.

    என் காதல் சொல்ல நேரமில்லை..
    உன் காதல் சொல்ல தேவையில்லை..
    நம் காதல் சொல்லும் வார்த்தையில்லை..
    உண்மை மறைத்தாலும் மறையாதடி…

    உன் கையில் சேர ஏக்கமில்லை…
    உன் தோளில் சாய ஆசையில்லை…
    நீ போன பின்பு சோகமில்லை…
    என்று பொய் சொல்ல தெரியாதடி…

    உன் அழகாலே அழகாலே
    என் வெயில்காலம் அது மழைக்காலம்…

    உன் கனவாலே உன் கனவாலே
    மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்….

    காற்றோடு கைவீசி நீ பேசினால்
    என்தன் நெஞ்சோடு புயல் வீசுதே…
    வயதோடும் மனதோடும் சொல்லாமலே
    சில எண்ணங்கள் வலைவீசுதே..

    காதல் வந்தாலே கண்ணோடுதான்
    கள்ளத்தனம் வந்து குடியேறுமோ..?

    கொஞ்சம் நடித்தேனடி..கொஞ்சம் துடித்தேனடி..
    இந்த விளையாட்டை ரசித்தேனடி..
    உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும்
    அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்க்கும்

    ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி..
    இந்த நிமிடங்கள் நீளட்டுமே..
    வேறேதும் நினைக்காமல் விழி மூடடி..
    இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே…

    யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்…
    என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்…

    சிறு பிள்ளையென என்தன் இமைகளது
    உன்னை கண்டாலே குதிக்கின்றதே…

    என் அதிகாலை என் அதிகாலை
    உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்..

    என் அந்திமாலை என் அந்திமாலை
    உன் மடிசாய்ந்து தினம் விழ வேண்டும்…

←Older