சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு

பெண்கள் பூவென்றிருந்தேன்
என் இதயம் குத்தப்படும் வரை.

ரோஜாவை அழகாக படைத்தவன்
முள்ளையும் மறக்கவில்லை!

——————————————————————————————-

காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
காவிரியில் தண்ணீர் இல்லையாம்
கண்ணீராவது ஓடட்டும்!

——————————————————————————————-

தமிழ்நாட்டிற்கு
புதிய மின்சார விநியோகம்
உன் விழிகளிலிருந்து!

——————————————————————————————-

நான் தவமிருந்தது உண்மைதான்
உன் வரம் கிடைக்குமென!

சாபம் கொடுத்துவிட்டாயே
கடைசிவரை கண்ணீரென!

——————————————————————————————-

உனக்கும்
நல்ல மனதுதான்
உன் நினைவுகளையாவது
காதலிக்க விட்டாயே…

——————————————————————————————-

தடுக்கித்தான் விழுந்தேன்.
அவள் நெஞ்சம்,
புதைக்குழி என்றறியாமல்….

——————————————————————————————-
தாடி கூட,
சரியாக முளைக்கவில்லை,
தேவதாஸ் ஆகிட!

——————————————————————————————-

தமிழ்நாட்டில்,
மின்சார தட்டுப்பாடு
அவள் கண் சிமிட்டும்போது.

——————————————————————————————-

விடியும் என்றுதான்
தினமும் உறங்குகிறேன்!

——————————————————————————————-

மின்னி மின்னி
மறையும் மின்மினிப்பூச்சி
உன் விழி!

——————————————————————————————-
நீ தீண்டினாலும்
சுகம்தான்!
திட்டினாலும்
சுகம்தான்!

——————————————————————————————-

காதல் வலையே
பிடியில்லாமல் விழுந்துவிட்டேன்
என்று பீற்றிக்கொள்ளாதே
அவளை
பிடித்துத்தான் விழுந்தேன்

——————————————————————————————-

என் இதயமாளிகையில்
இருக்கும் என்னவளுக்கு
மூச்சு திணறுகிறதாம்
புகைப்பதை நிறுத்திவிடுகிறேன்!

– பிரவீன் குமார் செ

http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-two

Comments (4)

Senthil RajaJuly 6th, 2010 at 10:58 am

என் இதயமாளிகையில்
இருக்கும் என்னவளுக்கு
மூச்சு திணறுகிறதாம்
புகைப்பதை நிறுத்திவிடுகிறேன்!

Nice 🙂

Rajasekar.TKJuly 6th, 2010 at 5:43 pm

உனக்கும்
நல்ல மனதுதான்
உன் நினைவுகளையாவது
காதலிக்க விட்டாயே…

kousalyaAugust 4th, 2010 at 9:12 am

ஹைக்ஹு…..!! no words…….. :)))

SruthiSeptember 28th, 2010 at 11:32 am

நல்லா இருக்கு. Super poemsssssssssssssssssss

Leave a comment

Your comment