Posts Tagged Tamil Poem

    உன்னை பார்த்த நாள் முதல்

    • உன்னை பார்த்த நாள் முதல்,
      தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
      கவிதை எழுதுகிறேன்!
    • உன்னை ரசித்த நாள் முதல்,
      உன் உருவம் மனங்கண்டு
      தனியே பேசுகிறேன்!
    • உன்னில் மயங்கிய நாள் முதல்,
      விளங்காத ஓர் உணர்வுக்கு
      விளக்கம் தேடுகிறேன்!
    • உன்னை காதலித்த நாள் முதல்,
      ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
      சுமை தெரியாமல்!

    – பிரவீன் குமார் செ