Posts Tagged சுனாமி

    கண்ணீர் இருப்பில்லை – சுனாமி கவிதை

    சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு என் மனம் பாதிக்கப்பட்டபோது எழுதிய வரிகள்…

    tsunami-pain-peom

    கண்ணீர் இருப்பில்லை

    அலைகடலே
    உன் கரையில் விளையாடியது குற்றமென
    பிஞ்சுகளின்
    உயிரோடு விளையாடிவிட்டாய்.

    உன் மடியில்
    வலை வீசியது குற்றமென
    மீனவர்களின்
    உயிரை விலை பேசிவிட்டாய் .

    குழந்தைகளை பிரித்து
    பெற்றோர்களை அனாதயாக்கினாய்
    பெற்றோரை பிரித்து
    குழந்தைகளை அனாதயாக்கினாய்.

    இன்னும்
    யாரை பிரிக்க
    அலை அலையாய்
    அலைந்துகொண்டு இருக்கிறாய்?

    இங்கு இறப்பதற்கு
    இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம்
    இறந்த பின் சிந்துவதற்கு
    கண்ணீர் தான் இருப்பில்லை…

    – பிரவீன் குமார் செ