Posts Tagged காதல்

    உன்னை பார்த்த நாள் முதல்

    • உன்னை பார்த்த நாள் முதல்,
      தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
      கவிதை எழுதுகிறேன்!
    • உன்னை ரசித்த நாள் முதல்,
      உன் உருவம் மனங்கண்டு
      தனியே பேசுகிறேன்!
    • உன்னில் மயங்கிய நாள் முதல்,
      விளங்காத ஓர் உணர்வுக்கு
      விளக்கம் தேடுகிறேன்!
    • உன்னை காதலித்த நாள் முதல்,
      ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
      சுமை தெரியாமல்!

    – பிரவீன் குமார் செ

    பெண்ணும் ஐம்பூதமும்

    fire-girl

    • நிலமும்
      நீயும்
      ஒன்றேயடி.
      என் ஜீவனை சுமப்பதால்!
    • நீரும்
      நீயும்
      ஒன்றேயடி.
      ஆழம் தெரியவில்லை!
    • காற்றும்
      நீயும்
      ஒன்றேயடி.
      உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!
    • வானும்
      நீயும்
      ஒன்றேயடி.
      முதலும் முடிவும் தெரிவதில்லை !
    • நெருப்பும்
      நீயும்
      ஒன்றேயடி.
      கண்களால் தொடமுடிந்தும் …..
      கைகளால் முடியவில்லை!!!

    – பிரவீன் குமார் செ

    காதல் யுத்தம்

    • உன்னை நினைக்கும் போதெல்லாம்
      என் நினைவுகள்
      நினைவிழக்கிறது!
    • உறங்கச்சென்றால்smoking-lover
      கண்கள்
      ஒத்துழையாமை செய்கிறது!
    • உண்ணசென்றால்
      வயிறு
      உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
    • மூளை
      மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
      வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
    • மொத்தத்தில்,
      உன்னால்
      என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
    • ஒவ்வொருமுறையும்,
      கண்ணீர் புகையை வீசியே
      இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
    • ஆம்.
      கண்ணீரோடு
      என் நுரையீரலில் புகையை வீசியே!!!

    – பிரவீன் குமார் செ

   Newer→