Posts Tagged காதல் கவிதை

    புறக்கணிப்பு – கவிதை

    Copy_of_lonely10

    உன் வார்த்தை
    என்னை அவமதிக்கிறது.

    உன் பார்வை
    என்னை உதாசீனப்படுத்துகிறது.

    உன் செயல்கள்
    என்னை புறக்கணிக்கிறது.

    ஐயோ!
    எப்போதுமில்லாமல்
    இப்போது எனக்குள்ளே
    தாழ்வு மனப்பான்மை!

    – பிரவீன் குமார் செ

    மௌனக்கதறல்கள்

    work.2155729.3.flat,550x550,075,f.guilt-or-blaze-with-anger-burn-with-shame

    பெண்ணே!
    உன் செவியில் கேட்கிறதா?
    உன் விரல் படாத பூக்களின்
    மௌனக்கதறல்களை.

    பெண்ணே!
    உன் கண்ணில் தெரிகிறதா?
    உன் பாதம்படாத மண்துகள்களின்
    ஏக்கப்பெருமூச்சுகளை.

    பெண்ணே!
    உன் மனம் அறிகிறதா?
    உன் ஸ்பரிசம் படாத காற்றின்
    அழுகை அலைவரிசையை.

    பெண்ணே!
    உன் இதயம் புரிகிறதா?
    உன் பார்வைபடாத என் ஜீவனின்
    மரண அவஸ்தைகளை.

    பெண்ணே!
    உன் ஆறாம் அறிவு உணர்கிறதா?
    உன்னால் ஏங்கும் என் தேகத்தின்
    உயிர் கசிவுகளை!

    – பிரவீன் குமார்

    எனக்குள்ளே குற்றஉணர்வு – கவிதை

     

    feeling-gulity-tamil-poem-by-praveen

    நான் எழுதுகிற கவிதைகள் யாவும்
    காதலை பற்றியே இருக்கிறதென
    உள்ளுக்குள்ளே குற்றஉணர்வு.

    எதை எதையோ எழுதிட
    எனக்கும் கூட ஆசைதான்.
    இருந்தும் தெரியவில்லை
    எதைப்பற்றி எழுதுவதென்று.

    நூலகம் சென்றேன்
    கவிதைகள் கற்க.
    பிரபலாமான கவிஞர்கள்
    பிரபலம் பெரும் கவிஞர்கள்
    வித விதமான கவிதை புத்தகங்கள்.
    வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது!

    தேடினேன்
    தேடினேன்
    நீண்ட நேர தேடலின் பயனாய்
    கிடைத்து விட்டது
    வைரமுத்துவின் கவிதை.

    அவர் கவிதைகளில் நான் பயணிக்க ஆரமித்தேன்.
    முடிவேயில்லாமல் சென்றது அவர் கற்பனைகள்!
    வரம் வாங்கித்தான் வந்திருக்கிறார் மனிதர்
    வைர வரிகளை படைத்திட!

    காதலை பற்றி எழுதிய கவிஞர்
    என் காதல் நரம்பினை தூன்டியே விட்டார்.
    விதவை பெண்ணின் கண்ணீர ஈரம்
    என்னில் காயாமல் இருந்தது சில நேரம்.

    ஏழைகளின் துயரங்கள்
    எனக்குள்ளேயும் எட்டிப்பார்த்தது.
    கிராமத்து வாழ்க்கையை
    நானும் வாழ்ந்தேன் சில கனம்.

    சில நேரம் அரசியல்வாதியானேன்.
    சில நேரம் ஆசிரியரானேன்.
    பல நேரம் குழந்தையானேன்.
    எதை படித்தேனோ
    அதை போலவே மாறினேன்!

    பயணம் முடிந்தது இனிதாய்.
    கவிதை எழுதும் திறனிலே
    பக்குவப்படதாய் உணர்ந்தேன்.
    காதலை தவிர மாற்றத்தையும்
    கவிதையாக்கும் முறையை அறிந்தேன்.

    வீட்டிற்கு சென்றேன்.
    மேஜை மேல் காகிதம் வைத்தேன்.
    காகிதம் மேல் பேனா வைத்தேன்.
    பேனா மேல் என் சிந்தையை வைத்தேன்.

    யோசித்தேன்…
    யோசித்தேன்…
    ஆழ்ந்து யோசித்தேன்….
    இருந்தும்
    காதலை தவிர
    கருமமும் வரவில்லை!

    நிலாப்பெண் – கவிதை

    the-girl-and-the-moon-girl-moon_big

    நிலவும் அழகுதான்
    அண்ணாந்து பார்த்து
    ரசிக்குமளவிற்கு.

    பார்த்தால் பக்கம்தான்
    நிஜமோ,
    தொடக்கைகள் நீண்டும்
    தொட்டுவிடா தொலைவிற்கு.

    தனிமையான இரவுப்பொழுதில்,
    நிலவே
    துணையாகிறது.

    கண்கள் காணக்கிடைத்தும்,
    சொந்தமில்லை என்பதே
    நிஜமாகிறது.

    உன்னை நிலவென்று ஒருமுறை
    கவிதை எழுதினேனே,
    இப்போது புரிகிறது
    நீ நிலவுதான்!

    விடையில்லா தேடல்

    தேடினேன்
    தேடினேன்
    நீண்ட நாட்களாய் தேடினேன்
    கிடைக்கவில்லை!

    தொலைந்த இடம்
    தெரியவில்லை.
    தொலைத்த இடம்
    தெரியவில்லை.
    அட
    இதயம் கூடவா
    திருட்டு போகும்!

    ஆனால்
    அதை திருடியது அவளென்றறிந்து
    என் இதயம் திரும்பக்கேட்டேன்.
    மறுத்துவிட்டாள்.

    சரி,
    என் இதயம் தான் கிடைக்கவில்லை,
    அவள் இதயமாவது கிடைக்குமென்று
    தேடினேன்.
    தேடினேன்.
    அதுவும்,
    கிடைக்கவில்லை.

    அடிப்பாவி!
    உனக்கு இதயமே இல்லையா!

    – பிரவீன் குமார் செ

←Older