Posts Tagged கவிதைகள்

    எனக்குள்ளே குற்றஉணர்வு – கவிதை

     

    feeling-gulity-tamil-poem-by-praveen

    நான் எழுதுகிற கவிதைகள் யாவும்
    காதலை பற்றியே இருக்கிறதென
    உள்ளுக்குள்ளே குற்றஉணர்வு.

    எதை எதையோ எழுதிட
    எனக்கும் கூட ஆசைதான்.
    இருந்தும் தெரியவில்லை
    எதைப்பற்றி எழுதுவதென்று.

    நூலகம் சென்றேன்
    கவிதைகள் கற்க.
    பிரபலாமான கவிஞர்கள்
    பிரபலம் பெரும் கவிஞர்கள்
    வித விதமான கவிதை புத்தகங்கள்.
    வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது!

    தேடினேன்
    தேடினேன்
    நீண்ட நேர தேடலின் பயனாய்
    கிடைத்து விட்டது
    வைரமுத்துவின் கவிதை.

    அவர் கவிதைகளில் நான் பயணிக்க ஆரமித்தேன்.
    முடிவேயில்லாமல் சென்றது அவர் கற்பனைகள்!
    வரம் வாங்கித்தான் வந்திருக்கிறார் மனிதர்
    வைர வரிகளை படைத்திட!

    காதலை பற்றி எழுதிய கவிஞர்
    என் காதல் நரம்பினை தூன்டியே விட்டார்.
    விதவை பெண்ணின் கண்ணீர ஈரம்
    என்னில் காயாமல் இருந்தது சில நேரம்.

    ஏழைகளின் துயரங்கள்
    எனக்குள்ளேயும் எட்டிப்பார்த்தது.
    கிராமத்து வாழ்க்கையை
    நானும் வாழ்ந்தேன் சில கனம்.

    சில நேரம் அரசியல்வாதியானேன்.
    சில நேரம் ஆசிரியரானேன்.
    பல நேரம் குழந்தையானேன்.
    எதை படித்தேனோ
    அதை போலவே மாறினேன்!

    பயணம் முடிந்தது இனிதாய்.
    கவிதை எழுதும் திறனிலே
    பக்குவப்படதாய் உணர்ந்தேன்.
    காதலை தவிர மாற்றத்தையும்
    கவிதையாக்கும் முறையை அறிந்தேன்.

    வீட்டிற்கு சென்றேன்.
    மேஜை மேல் காகிதம் வைத்தேன்.
    காகிதம் மேல் பேனா வைத்தேன்.
    பேனா மேல் என் சிந்தையை வைத்தேன்.

    யோசித்தேன்…
    யோசித்தேன்…
    ஆழ்ந்து யோசித்தேன்….
    இருந்தும்
    காதலை தவிர
    கருமமும் வரவில்லை!

    தேர்வு – கவிதை

    exam-tamil-poem

    தேர்வு தொடங்கியது.
    கேள்வித்தாள் ஒருகையில்,
    பதில்தாள் மறுகையில்.

    கேள்வித்தாளை அனாதையாக்கினேன்
    பதில்தாளை மட்டும் தத்தெடுத்தேன்!

    பக்கம் பக்கமாய் எழுத ஆரமித்தேன்.
    ஒன்று
    இரண்டு
    முன்று
    .
    .
    .
    அடுக்கிக்கொண்டே போனேன்.

    தேர்வு நேரம் முடிந்தது.
    ஆசிரியர் ஆச்சர்யத்தோடு வாங்கினார்
    கட்டப்படாத என் ஒற்றை பதில்தாளை.

    பாவம்!
    அவருக்கு தெரியாது
    என் பாக்கட்டில் மீதமுள்ள
    நான் எழுதிய கவிதை தாள்களை!

    பாவம்!
    யாருக்கும் தெரியாது,
    கடைசி வரை அந்த கேள்வித்தாள்
    என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!

    விடையில்லா தேடல்

    தேடினேன்
    தேடினேன்
    நீண்ட நாட்களாய் தேடினேன்
    கிடைக்கவில்லை!

    தொலைந்த இடம்
    தெரியவில்லை.
    தொலைத்த இடம்
    தெரியவில்லை.
    அட
    இதயம் கூடவா
    திருட்டு போகும்!

    ஆனால்
    அதை திருடியது அவளென்றறிந்து
    என் இதயம் திரும்பக்கேட்டேன்.
    மறுத்துவிட்டாள்.

    சரி,
    என் இதயம் தான் கிடைக்கவில்லை,
    அவள் இதயமாவது கிடைக்குமென்று
    தேடினேன்.
    தேடினேன்.
    அதுவும்,
    கிடைக்கவில்லை.

    அடிப்பாவி!
    உனக்கு இதயமே இல்லையா!

    – பிரவீன் குமார் செ

   Newer→