சிறு (சினிமாக்) கவிதைகள் – தொகுப்பு மூன்று

நானெழுதிய மற்ற சிறுகவிதைகளை போலில்லாமல் இதில் தமிழ் சினிமா பெயர்கள் முடிவடையுமாறு ஒரு சிறு முயற்சி.  படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எரிமலையை கூட
பனிமலையாக மாற்றும்
உன் பார்வையை தரிசிக்க
பாதையில் காத்திருக்கிறேன்
நீ வருவாயென.

——————————————————————————————-

அந்திசாயும் ஒரு மாலையிலே,
நாம் காதல் புரிந்த வேளையிலே,
முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
நினைத்துக்கூட பார்த்ததில்லை,
உன்னை முதலாய்
சந்தித்த வேளையிலே.

——————————————————————————————-
ஆக்ராவில் இல்லையென்றாலும்,
என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
நானும்
ஷாஜஹான்.

——————————————————————————————-

காதல் கொண்டேன்.
கவிஞனானேன்.

——————————————————————————————-

காதல் கொண்டேன்
கண்ணீர கொண்டேன்.

——————————————————————————————-

பார்வைகளில் நீயெனை உரசிட
பற்றியெரியும் காதல் தீ
அனையும் முன்,
உன்னைக்கொடு என்னை தருவேன்.

——————————————————————————————-

நந்தவனத்தில் தொலைந்த
பூக்களெல்லாம் புடைசூழ
நடக்கிறதோர்
பூமகள் ஊர்வலம்.

——————————————————————————————-

மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
தனிமை என்னை பாடாய் படுத்த,
உன் ஈரச்சேலை என்னுள் தீயை மூட்ட,
முத்தமிட்டு அதை நீ அனைத்ததை
மறக்கமாட்டேனென்
நினைவிருக்கும் வரை.

——————————————————————————————-

புகைப்பதை நிறுத்தச்சொல்லி
நீ என்னுடன் பகை கொண்டபோது
உடனே நானதை நிறுத்தினேனே,
அது உனக்கு உணர்த்தியிருக்கும்
நான் செய்தது
காதலுக்கு மரியாதை.

——————————————————————————————-

நான் மறக்கச்சொல்லியும்
மறுக்கிறதென் இதயம்
துடிப்பதற்கு,
பூவே உனக்காக.

——————————————————————————————-

வழக்கமான இரவென்றாலும்,
வழக்கமான ஆசைகளோடு,
இன்றும் போர்வைக்குள் பதுங்கினேன்.
என்னை நனவில் காதலிக்காத நீ,
கனவிலாவது காதலிக்க வருவாய்
என்ற ஆசையுடன் கண்களை மூடி
நினைத்தேன் வந்தாய்.

——————————————————————————————-

ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
என்றும் இருப்பேன்
ப்ரியமுடன்.

——————————————————————————————-

கஷ்டமான காலங்களில்
மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
உன் புன்னகையை
பார்த்தாலே பரவசம்.

——————————————————————————————-

பிடியின்றி விழுந்த குழி
புதைக்குழி என்றறிந்தும்
உன் இதயக்குழி என்பதால்
எழுந்துவர மனமில்லையென்
ப்ரியமானவளே.

——————————————————————————————-

என் உயிரைக் கொல்லாமல்
உடலில் மின்சாரம் பாய்கிறது நீயென்
கன்னத்தில் முத்தமிட்டால்.

——————————————————————————————-

கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத,
காலில் விழுந்தும் கிடைக்காத,
காதலியின் முத்தம்
எதிர்பாராமல் கிடைத்தால்
துள்ளாத மனமும் துள்ளும்.

——————————————————————————————-

ஆண்களின் இதயங்கள் எரிக்கப்பட
பெட்ரோல் தேவையில்லை.
தீ கூட தேவையில்லை.
பெண்களின்
பார்வை ஒன்றே போதுமே.

——————————————————————————————-

தோற்றம்: http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-three

Comments (9)

LogeshAugust 14th, 2010 at 8:30 pm

நல்ல வருவீங்க தம்பி

kousalyaAugust 16th, 2010 at 9:17 am

அனைத்தும் அருமை…கவிதைகள் தொடரட்டும் இன்னும்…

kousalyaAugust 16th, 2010 at 9:19 am

இன்றில் இருந்து உங்களை தொடருகிறேன்….

சே.குமார்August 18th, 2010 at 11:55 am

அன்பின் நண்பா…
வணக்கம்.
உங்கள் வலைப்பூ குறித்த பகிர்வை எனது இன்றைய வலைச்சரம் பதிவில் தொடுத்து இருக்கிறேன்.

நீங்கள் வாசிக்க வலைச்சரம்(http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_18.html) செல்லவும்.

நன்றி.
நட்புடன்
சே.குமார்

Murugan MKAugust 20th, 2010 at 10:03 pm

இந்த வயசுல இவ்வளவு அறிவா எந்த குழந்திக்கு !!!!!!!!!!

பிரவீன்August 20th, 2010 at 11:26 pm

@முருகன் என்ன வச்சி காமடி கீமடி பண்ணலையே?

Deepa SathishAugust 20th, 2010 at 11:28 pm

nice…enjoyed…keep going

N.Subashini,NagercoilMarch 5th, 2011 at 5:01 pm

all kavithikal very nice

sarathiMay 5th, 2011 at 11:12 am

ஹாய்..நன் இன்னக்கி தான் உங்கள் வலைக்கு வந்தேன் அனைத்தும் சூப்பர் ….

Leave a comment

Your comment