Posts Tagged தேர்வு

    தேர்வு – கவிதை

    exam-tamil-poem

    தேர்வு தொடங்கியது.
    கேள்வித்தாள் ஒருகையில்,
    பதில்தாள் மறுகையில்.

    கேள்வித்தாளை அனாதையாக்கினேன்
    பதில்தாளை மட்டும் தத்தெடுத்தேன்!

    பக்கம் பக்கமாய் எழுத ஆரமித்தேன்.
    ஒன்று
    இரண்டு
    முன்று
    .
    .
    .
    அடுக்கிக்கொண்டே போனேன்.

    தேர்வு நேரம் முடிந்தது.
    ஆசிரியர் ஆச்சர்யத்தோடு வாங்கினார்
    கட்டப்படாத என் ஒற்றை பதில்தாளை.

    பாவம்!
    அவருக்கு தெரியாது
    என் பாக்கட்டில் மீதமுள்ள
    நான் எழுதிய கவிதை தாள்களை!

    பாவம்!
    யாருக்கும் தெரியாது,
    கடைசி வரை அந்த கேள்வித்தாள்
    என் கண்களினால் கற்பழிக்கப்படவில்லை என்று!