Posts Tagged சிசுக்கொலை

    பெண் சிசுக்கொலை

    பசித்தழுகிறது பச்சிளங்குழந்தை.
    அறுந்து விழாத தொப்புள் கொடியை
    பார்க்கும் கண்கள் சொல்லிவிடும்
    புதியதாய் பிறந்த குழந்தையென்று.

    அழுகுரல் கேட்டுணர்ந்து வந்த தாய்
    குழந்தையை மடியினில் வைத்து
    ஊட்டினாள் புட்டிப்பாலை.

    பசியடங்கி படுத்துறங்கிய குழந்தையைக்கண்டு
    கண்ணீரோடு கீழே ஊற்றினாள்
    மீதமிருந்த கள்ளிப்பாலை.

    உடையில்லா உடலைக்கண்டு
    உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
    கொல்லப்பட்டது பெண்பாலை!