Posts Tagged கவிதை தொகுப்பு

    சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று

    காதல் காவியம்

    காதல் வானிலே,
    வாழும் காவியம் நாம்.
    நிலவாய் நீ,
    ஒளியாய் நான்.

    ——————————————————————————————-

    தனிமை

    காதல் தீவிலே,
    நிலமாய் நான்….
    தனியாய் என்று வருந்தினேன்!
    கடலாய் நீ…
    அலையாய் வந்து மோதினாய்..

    ——————————————————————————————-

    காதல் மொழி.

    ஊமைகள் கூட
    பேசும் மொழி,
    காதல் மொழி!

    ——————————————————————————————-

    தேடல்

    மலரை தேடி வண்டு வந்தது,
    மகிழ்கிறாய்!
    இரவை தேடி நிலவு வந்தது,
    ரசிக்கிறாய்!
    உன்னை தேடி நான் வந்தால் மட்டும்
    ஏனடி வெறுக்கிறாய்?

    ——————————————————————————————-

    அவளின் பிறந்த நாள்

    பூவுக்கு பிறந்த நாளாம்!
    புத்தாடை போர்த்திக்கொண்டது…
    பூவிலும் அவள்
    மல்லிகையோ ரோஜாவோ அல்ல..
    அது வாடி விடும்.
    அவளோ வாடா மல்லி
    என்றென்றும் “வாடா மல்லி “!

    ——————————————————————————————-

    சிக்கல்

    காதல் புயல் என்றறிந்தும்
    ஆண் மனம் மாட்டிக்கொள்கிறது!
    காதல் தீ என்றறிந்தும்,
    ஆண் குணம் சுட்டுக்கொள்கிறது!
    காதல் சுழல் என்றறிந்தும்
    ஆண் இனம் சிக்கிக்கொள்கிறது!

    ——————————————————————————————-
    உனக்காக,
    நான் புதிதாய் கற்றுக்கொண்ட மொழி,
    மௌன மொழி!

    ——————————————————————————————-

    கொலை

    புயலில் பிழைத்து,
    இடியில் தப்பித்து,
    தீயில் நடந்து,
    நீரில் தவழ்ந்து
    உன்னை காண வந்தேன்
    ஒரே புன்னகையில் என்னை கொன்றுவிட்டாயடி!

    ——————————————————————————————-

    கனவு

    நீ என்னிடம்
    கனவிலாவது காதலிப்பாய் என்றுறங்கினால்
    கனவு கூட,
    கனவாகி போனது!

    ——————————————————————————————-

    நேரம்

    நீ இருக்கும் போது,
    நேரம் போதவில்லை.
    நீ இல்லாத போது,
    நேரம் போகவில்லை!

    ——————————————————————————————-

    காதல் என்ன  கெட்ட வார்த்தையா?
    பரவாயில்லை,
    பேசித்தான் பார்ப்போமே!

    ——————————————————————————————-

    என் டைரி

    உன்னை பார்த்த நாள் முதல்,
    என்னிடம்,
    என் டைரி கோபித்துக்கொண்டது.
    எழுத்துச்சுமை அதிகமாகிறதாம்.
    என் மனச்சுமை குறைவது தெரியாமல்……

    ——————————————————————————————-

    விண்மீன்களை கண்களாக்கினான்,
    சந்தனத்தை தோலாக்கினான்,
    பளிங்கை உடலாக்கினான்
    ஆனால்,
    இதயம் மட்டும் கல்லாக்கிவிட்டானே!

    ——————————————————————————————-
    பூக்கடையில்,
    ஒவ்வொரு பூக்களும் அழகழகாய் இருந்தன,
    நீ வரும் வரையில்!

    புத்தகக்கடையில்,
    ஒவ்வொரு புத்தகமும் அரிதாய் இருந்தன
    நீ தொடும் வரையில்!

    ——————————————————————————————-

   Newer→