கல்லூரி நினைவுகள்

என் கல்லூரி வாழ்க்கை முடிவுறும் தருணத்தில் எழுதிய கவிதை இது. கல்லூரியை விட்டு விடை பெரும் கடைசி நாளன்று எடுத்த புகைப்படம் இது. இரண்டையும் இணைத்து ஒன்றாக பார்க்கையில், கால இயந்திரம் பின்னோக்கி மீண்டும் என்னை அந்த வசந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது…

PHOTO004

ஆண்டுகள் பல
கரைந்தாலும்,
என் சுவாசம் இங்கு
கலந்தே இருக்கும்.

பாதங்கள் பல
கடந்தாலும்,
என் பாதச்சுவடு இங்கு
பதிந்தே இருக்கும்.

மூன்று வருட
நிகழ்வுகள் அனைத்தும்,
காலம் வரை
என் கனவினில் இருக்கும்.

நானும் நண்பர்களும்
சேர்ந்திருந்த நாட்கள்,
சாகும் வரை
என் நினைவினில் இருக்கும்

இருந்தும்,
எனக்கு நிழல் தந்த
கல்லூரி மரமே.
எனக்கும் நிழல் தந்த
கல்லூரி மரமே.

இந்த கடைசி தருணத்தில்,
உன்னிடம்
தண்ணீர் விட்டு விடைபெறவில்லை.
என் கண்ணீர் விட்டு விடைபெறுகிறேன்.

என்னை மறந்துவிடாதே,
நானும்
உன் நிழலில்
ஓய்வேடுத்தேன் என்று….

– பிரவீன் குமார் செ

Comments (7)

shakthi arunJune 18th, 2012 at 12:07 am

அருமை 🙂 🙂 🙂

selvakumarJune 18th, 2012 at 2:51 pm

கல்லூரி நாட்கள் மறக்க முடியாத ஒன்று. கவிதை சூப்பர்!!!

rathnavelnatarajanJune 19th, 2012 at 6:20 am

அழகு கவிதை.
வாழ்த்துகள்.

PrakashOctober 1st, 2012 at 1:53 pm

அருமை அருமை

malavicaSeptember 4th, 2013 at 8:54 pm

ரொம்ப நல்லாருக்குது இந்த கவிதை சோ பெஔதிபுல்

Sparrow NandhaJune 2nd, 2016 at 8:46 pm

Arumai

Leave a comment

Your comment