செய் அல்லது செத்து மடி – கவிதை

 

IMG_7829

எங்கு நோக்கினும் சுயநலவாதிகள்.
எங்கு கேட்டினும் பொய்கள், புரட்டுக்கள்.
எங்கு சென்றினும் நம்பிக்கை துரோகிகள்.
நம் வெற்றியை கண்டு
உளம் மகிழ யாருமில்லை என்றாலும்
நம் தோல்வியை கொண்டாட
பெரும் கூட்டமே இங்கு காத்திருக்கிறது…
சற்று தடுமாறினாலும்,
நம்மை உயிரோடு விழுங்க
அது தூங்காமல் விழித்திருக்கிறது.

“காலம் கனியும்”
என காத்திருத்தலும் பயனுக்கில்லை.
“வாழ் அல்லது வாழவிடு”
என்ற அறசீற்றமும் பிரயோஜனமில்லை.
உனக்கு இருக்கும் ஒரே வழி,
“செய் அல்லது செத்து மடி..”

– பிரவீன் குமார் செ

Comments (1)

rathnavelnatarajanJuly 17th, 2014 at 12:58 pm

மனம் தளர வேண்டாம்.
வாழ்த்துகள்.

Leave a comment

Your comment