சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு

உயிரெழுத்து நீயானாய்.
மெய்யெழுத்து நானானேன்.
இருவரும் சேர்ந்தோம்,
உயிர்மெய் எழுத்தானது நம் காதல்!
அதனால் தானோ,
ஆய்(யு)த எழுத்தாய்
உன் அப்பா!

——————————————————————————————-

வாழ்வு முழுவதும் சுகம் தர,
தாசி வாங்கும் பணம் போலே,
வரதட்சணை.

——————————————————————————————-

இடியை பார்த்து
நடுங்காத இந்த நெஞ்சம்
உன் இடையை பார்த்ததும்…..

——————————————————————————————-

மனம் ஒரு குரங்குதான்.
உன்னை மறக்க நினைக்கும் என் மனம்
உன் நினைவுகளையும் நினைக்க
மறப்பதில்லையே.

——————————————————————————————-

என்னுயிர்
உன்னுயிரோடு
உறவாடி
உயிர்தருகிறது
ஓர் உயிர்க்கு.

——————————————————————————————-

நீ என்னிடம்
கனவிலாவது பேசுவாய் என்றுறங்கினால்
கனவு கூட கனவாகியே போனது

——————————————————————————————-

நான் தினமும்
ரத்ததானம் செய்கிறேன்
கொசுக்கடி .

——————————————————————————————-

சிதைந்த சூரியன்
உடைந்த வெண்ணிலா
உதிர்ந்த விண்மீன்
நனைந்த மேகம்
இவை அனைத்தும்
வானில் சாத்தியமென்றால்
என் வாழ்வில்
அவளும் சாத்தியம்

——————————————————————————————-

ஆசிரியப்பா தெரியாது
வெண்பா தெரியாது
எதுகை மோனை தெரியாது
மொத்தத்தில் இலக்கணமே தெரியாது
இருந்தும் காதலித்துப்பார்
உனக்கும் கவிதை எழுதத்தெரியும்.

——————————————————————————————-

உன் கூந்தலில் குடியேற
வாய்ப்பிழந்த பூக்கள் யாவும்
தற்கொலை செய்தன
தரையில் குதித்து

——————————————————————————————-

உடலை
உயிர் பிரிந்ததும்
எரிப்பது வழக்கம்

நீ
என்னை பிரிந்தும்
நான் இன்னும் பிணமாய்,,,,

——————————————————————————————-

உள்ளத்திற்கும்
உணர்வுகளுக்கும்
ஏற்பட்ட உறவினால்
கற்பமில்லாமல் பிரசவிக்கிறது
என் கவிதை

——————————————————————————————-

Comments (7)

KumarOctober 10th, 2010 at 8:28 am

சிறுகவிதைகள் அருமைங்க.
வாழ்த்துக்கள்.

palaniOctober 12th, 2010 at 7:38 pm

மச்சான் சூப்பர் டா சிறுகவிதை தொகுப்பு நான்கு நீ இன்னும் வளர்ந்து வர வாழ்த்துகள்

palaniOctober 12th, 2010 at 7:39 pm

மச்சான் சூப்பர் டா

பிரவீன்October 12th, 2010 at 7:48 pm

நன்றி பழனி மற்றும் குமார் .

Selvakumar MNovember 1st, 2010 at 3:45 pm

பிரவீன், நீங்கள் காதல் வலையில் விழுந்துலீர்கள் என்று நான் நினைக்கிறேன். கவிதை அருவி போல் கொட்டுகிறது. ஒவ்வொரு கவிதையும் ரசிக்கும் படியாக உள்ளது.

பிரவீன்November 2nd, 2010 at 2:36 pm

செல்வகுமார் உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி… ஆனால் நீங்களாக இப்படி எல்லாம் கிளப்பி விடக்கூடாது… ஹி… ஹீ

SelvarajuJune 12th, 2011 at 11:32 am

Its so cute. Keep it up Praveen…

Leave a comment

Your comment