நண்பர்கள் தின வாழ்த்துக்கள் – கவிதை

friendship day tamil poem

மனைவி மட்டும் அல்ல…
நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.

என் சந்தோசத்தை தன் சந்தோசமாக
நினைத்து மகிழும் என் நலம் விரும்பிகளுக்கும்,

துக்கங்களிலும், தோல்விகளிலும் என்னை துவண்டுவிடாமல்
தோள்கொடுத்து உற்சாகப்படுத்தும் சக்திமான்களுக்கும்,

தவறுகளை கண்டும் காணாமல் போய்விடாது
அதை சுட்டிக்காட்டி என்னை நெறிப்படுத்தும் புத்திமான்களுக்கும்,

பேசத்துடித்தும் பேசமுடியா தூரத்தில்
காலத்தால் கடத்தப்பட்டபட்ட நல்லுள்ளங்களுக்கும்,

வேறுவழியில்லாமல் என்னிடம் பேசியே ஆகவேண்டிய
நிர்பந்தத்தில் கிடத்தப்பட்ட பாக்கியவான்களுக்கும்,

நட்பின் போர்வையில் இன்னும் தன் சுயரூபத்தை
வெளிக்காட்ட வாய்ப்புகிடைக்காத புண்ணியவான்களுக்கும்,

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

– பிரவீன் குமார் செ.

Comments (3)

ManikandanSeptember 11th, 2015 at 5:38 pm

அருமையான கவிதை

shreeSeptember 12th, 2016 at 1:34 pm

குட் கவிதை

RojaMay 25th, 2018 at 5:09 pm

மிகவும் அருமையாக உள்ளது,உங்களுடைய கவிதை .மிக்க நன்றி
Best Summer Courses in Chennai | Best Java Summer Courses in Saidapet | Best Summer Camp Training in Saidapet | Best Summer Classes in Saidapet

Leave a comment

Your comment