<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சுவடுகள் &#187; இழப்பு</title>
	<atom:link href="http://www.cpraveen.com/suvadugal/tag/%e0%ae%87%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.cpraveen.com/suvadugal</link>
	<description>என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள்...</description>
	<lastBuildDate>Wed, 08 Sep 2010 18:33:48 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0.1</generator>
		<item>
		<title>நடிகர் முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/actor-muralis-heart-should-have-stopped-later/</link>
		<comments>http://www.cpraveen.com/suvadugal/actor-muralis-heart-should-have-stopped-later/#comments</comments>
		<pubDate>Wed, 08 Sep 2010 18:02:17 +0000</pubDate>
		<dc:creator>பிரவீன்</dc:creator>
				<category><![CDATA[ஞாபகங்கள்]]></category>
		<category><![CDATA[இழப்பு]]></category>
		<category><![CDATA[சினிமா]]></category>
		<category><![CDATA[மறைவு]]></category>
		<category><![CDATA[முரளி]]></category>

		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=593</guid>
		<description><![CDATA[இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த நடிகர் முரளியின் இதயம் இன்று துடிப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த செய்தியை இன்று கேள்விப்பட்ட உடனேயே சில நிமிடங்கள் உறைந்து போனேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது.  ஏனென்று யோசித்து பார்க்கிறேன்.  முரளியை தீவிர ரசிகனாக இதுவரை நான் இருந்திருக்கவில்லை. அவரது காலங்களின் நான் சினிமாக்களை பார்த்து வளர்ந்திருக்கவில்லை.  ஆனாலும் அவரை நான் ரசித்திருக்கிறேன். புது வசந்தம், இதயம் போன்ற படங்களின் பாடல்கள் மூலமே அவரை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2010/09/actormurali.jpg"><img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto; border: 0px;" title="actor murali" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2010/09/actormurali_thumb.jpg" border="0" alt="actor murali" width="244" height="184" /></a> இதயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் இதயத்தில் நீங்காத இடம் பிடித்த நடிகர் முரளியின் இதயம் இன்று துடிப்பதை நிறுத்திக்கொண்டது. இந்த செய்தியை இன்று கேள்விப்பட்ட உடனேயே சில நிமிடங்கள் உறைந்து போனேன். அது என்னை துயரத்தில் ஆழ்த்தியது.  ஏனென்று யோசித்து பார்க்கிறேன்.  முரளியை தீவிர ரசிகனாக இதுவரை நான் இருந்திருக்கவில்லை. அவரது காலங்களின் நான் சினிமாக்களை பார்த்து வளர்ந்திருக்கவில்லை.  ஆனாலும் அவரை நான் ரசித்திருக்கிறேன்.</p>
<p>புது வசந்தம், இதயம் போன்ற படங்களின் பாடல்கள் மூலமே அவரை சிறு வயதில் எனக்கு பரிட்சயம் ஆனதாக ஒரு ஞாபகம். சினிமா, டிவி என்பதை அறிந்துக்கொண்டு இருந்த மிகச்சிறிய வயதாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். சரியாக நியாபகம் இல்லை. ஆனால் படங்களை பார்க்க ஆரம்பம் செய்த என்னுடைய பள்ளி பருவத்திலே “காலமெல்லாம் காதல் வாழ்க” என்ற திரைப்படத்தை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதுவே எனக்கு தெரிந்து நான் விரும்பிப்பார்த்த முரளியின் முதல் திரைப்படம். அத்திரைப்படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. ஆறாம் வகுப்பு நான் பயின்று கொண்டிருந்திருக்கலாம். அப்போதே அதை மனப்பாடமாக பாடிக்கொண்டு இருந்திருக்கிறேன். இப்போது கூட அந்த பாடல்களை கேட்க்கும்போது அந்த காலகட்டங்கள் ஞாபகத்திற்கு வந்து செல்கின்றன.</p>
<p>அதே நேரத்தில் அவர் சூர்யாவிடம் சேர்ந்து ஒரு படம் நடித்தார். சில வருடங்களில் வெற்றிக்கொடி கட்டு போன்ற வெற்றி படங்களின் படங்களில் நடித்தார். கடல் பூக்கள் படத்திற்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் வாங்கினார். பிறகு நான் தீவிரமாக சினிமா பார்க்க ஆரம்பம் செய்த வயதில் அவரது படங்கள் காணமல் போயின. வெளிவந்த சில படங்களும் சரியாக போகவில்லை. சுந்தரா ட்ராவல்ஸ் படம் வந்த போது அந்த படத்தில் நடித்த பஸ்ஸையும், எலியையும் அருகில் இருந்த தியேட்டருக்கு கொண்டு வந்திருந்தார்கள். அதுவே நான் முரளி நடித்து பார்த்த கடைசி படம்.  முரளி அமைதியான, சாந்தமான, இளமையான தோற்றமுடையவர் என்பதால் கண்டிப்பாக யாருக்கும் அவரை பிடிக்காமல் இருக்காது. நன்றாக கவனித்து பாருங்கள் அவரது குரல் கூட மிகவும் மென்மையானது. அது மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களை போலில்லாமல் எந்த ஒரு கிசி கிசுவிலும் வராத நடிகராகவே கடைசி வரை இருந்தார்.</p>
<p>இக்கால சினிமா ரசிகர்கள் அவரை ரசித்திருக்க வாய்ப்பு குறைவு தான். ஏன் என் வயதையொத்தவர்கள் கூட சேர்த்துதான். அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் வர நேரம் சரியாக அமையா விடிலும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் இருந்த கல்லூரி மாணவர்கள் அவரை மறந்திருக்க வாய்ப்பு இல்லை. நடிகர் மோகன் எப்படி எல்லா திரைப்படங்களிலும் மைக்கோடு வந்து மைக் மோகன் ஆனாரோ. அது போல் எல்லா திரைப்படங்களிலும்  புத்தகத்தை எடுத்துக்கொண்டு கல்லூரி மாணவனாக வருவார் முரளி. மோகன் மைக் எடுத்து மேடை ஏறினால் படம் ஹிட் என்ற செண்டிமென்ட் அப்போது இருந்தது. அது போல் முரளி புத்தகம் எடுத்துக்கொண்டு கல்லூரி சென்றால் படம் கண்டிப்பாக ஹிட்.</p>
<p>நான் இப்போதும் உறுதியாக கூறுவேன், முரளி காலத்து நடிகர்கள் யாரேனும் இப்போது கல்லூரி மாணவனாக நடிக்க முடியுமா? கற்பனை செய்து பாருங்கள். பார்த்திபன்? பிரபு? பாண்டியராஜன்? சுரேஷ்?. ஏன் அதற்கடுத்த கட்ட நடிகர்களான விஜய், அஜித், விக்ரம் கூட  மீண்டும் கல்லூரி மாணவர்களாக நடித்தால் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இன்றும் முரளியின் தோற்றமும் குரலும்அதற்கு பொருந்துவதாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கும்.</p>
<p>நான் இப்போது கூறப்போவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காதல் கொண்டேன் திரைப்படம் வந்த தருணத்தில் டைரக்டர் செல்வராகவனின் பேட்டி ஒன்றை படித்தேன். அந்த திரைப்படத்தில் தனுஷிற்கு பதிலாக ஏற்கனவே இரண்டு நடிகர்கள் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்டது என்று கூறி இருந்தார். மாஸ்டர் டிகிரி படிக்க அதன் நாயகன் சென்னை வருவதாக அமைத்து இருந்த அந்த கதை பிறகு தனுஷிற்காக சிறிது கதை மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த இரண்டு நடிகர்களில் செல்வராகவன் தேர்வு செய்து இருந்த ஒரு நடிகர் தான் முரளி. அது மட்டும் உண்மையாக இருந்து படம் வெளிவந்து இருந்திருந்தால்? முரளி கண்டிப்பாக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டு இருப்பார்.</p>
<p>முரளியின் இழப்பு கண்டிப்பாக சோகத்தின் உச்சம் தான். எங்கள் குடும்பத்தாருக்கும் தான் அதன் பாதிப்பு இருக்கிறது..  முரளியை நாங்கள் நேரில் கண்டிராவிட்டாலும், பழக வாய்ப்பு இல்லாவிட்டாலும் அவருடையமறைவு எங்களை உறையவைத்ததற்க்கு காரணம் இருக்கிறது. சுமார் தொன்னூறுகளில் இருந்த அவருடைய தோற்றம் அப்படியே அச்சு அசலாக என்னுடைய தாய் மாமாவை போலிருந்தது. முளியின் முகம் எனக்கு அப்போதுதான் பரிட்சயமான சமயம் என்பதால் முரளியை பார்த்தால் என்னுடைய மாமாவை பார்ப்பது போலவே இருக்கும். எதிர்பாராவிதாமாக அவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போனார். இருவருக்கும் தோற்றத்தை தவிர மேலும் சிறு ஒற்றுமைகள் இருப்பதை இப்போது உணர்கிறேன்.</p>
<p>இருவரும் இளம் வயதிலேயே இறந்தனர். என் மாமா இறக்கும் போது அவருடைய வயது முப்பத்தி ஆறு, முரளிக்கோ நாற்பத்தி ஆறு. இருவருக்கும் மகனும் மகளும் உள்ளனர். தன்னுடைய மகனின் வளர்ச்சியையும், பெண்ணின் திருமணத்தை காணக்கிடைக்காமலும் மரணம் எய்திவிட்டார்கள் இருவரும். அவர்களுடைய இறப்புசெய்தியை அறிவித்தது சென்னையில் ஒரு மருத்துவமனையில் தான். முரளிக்கு திரையுலகமே திரண்டு வந்து இருந்தது, இவருக்கோ ஒட்டு மொத்த நெய்வேலி லிக்னயிட் கார்பரேசன் ஊழியர்களும், முக்கிய அதிகாரிகளும், தொழிற்சங்க பிரதிநிதிகளும் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.</p>
<p>என் மாமா இறந்த இந்த இடைப்பட்ட இரண்டு வருடத்தில் முரளியை காணும் போது எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் மாமாவை நேரில் காண்பது போன்ற உணர்வு. அவர் இறந்த பிறகும் உயிருடன் இருப்பதை போன்ற ஒரு தற்காலிக தோற்றத்தை அது உருவாக்கியது. தான் மிகவும் நேசித்தவரும், ரத்த சம்பந்தமானவரும் இறந்து பிறகு அவர் உருவத்தை உடையவர்களை நேரில் பார்க்க வாய்ப்புக்கிட்டியவர்களை கேட்டுப்பாருங்கள் அது எவ்வளவு பெரிய விஷயமென்று.</p>
<p>ஓரிரு வாரங்களுக்கு முன்னர் கூட விஜய் டீவியில் வரும் காபி வித் அனு நிகழ்ச்சியில் தன் மகன் ஆதர்வாவுடன் வந்திருந்தார் முரளி. எங்கள் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் தொலைப்பேசியின் மூலம் தகவல் பரிமாறப்பட்டு அனைவரின் இல்லத்தின் வரவேற்பறையிலும் அந்த நிகழ்ச்சியே ஓடியது. அனைவருக்கும் எங்கள் மாமாவை நீண்ட நாட்கள் கழித்து நேரில் கண்டதாக ஒரு உணர்வு அப்போது.  இனிமேல் இவர்களுக்கு அதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்.</p>
<p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/plugins/add-to-any/share_save_256_24.png" width="256" height="24" alt="Share/Bookmark"/></a> </p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/actor-muralis-heart-should-have-stopped-later/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/tamil-poem-still-i-remember-mummy/</link>
		<comments>http://www.cpraveen.com/suvadugal/tamil-poem-still-i-remember-mummy/#comments</comments>
		<pubDate>Fri, 18 Jun 2010 19:35:11 +0000</pubDate>
		<dc:creator>பிரவீன்</dc:creator>
				<category><![CDATA[கவிதைகள்]]></category>
		<category><![CDATA[அம்மா]]></category>
		<category><![CDATA[இழப்பு]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[தாய்]]></category>

		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=446</guid>
		<description><![CDATA[2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும்  தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன். இத்தனையும் அங்கு சென்றடையும் வரை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>2004ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். கல்லூரியில் பயின்று கொண்டு இருக்கும்  தருணம். ஒரு நாள் வகுப்பறையில் இருக்கும்போது அந்த தகவல் வருகிறது. நோய்வாய்ப்பட்டு இருந்த ஒரு வகுப்பறை நண்பனின் தாயார் இறந்துவிட்டார் என்று. அனைவரும் அவன் வீட்டிற்கு துக்கம் அனுஷ்டிக்க சென்றோம். ஆனால் அதுவரை எனக்கு அந்த இழப்பின் ஆழம் முழுதாக புரிந்திருக்கவில்லை. ஒரு வேலை மிக நெருக்கமானவர்கள் யாரையும் நான் அந்த தருணத்தில் இழந்திருக்கவில்லை என்பதால் என கருதுகிறேன்.</p>
<p>இத்தனையும் அங்கு சென்றடையும் வரை மட்டுமே. அவன் வீட்டின் அருகே சென்ற போது&#8230; என் நண்பனின்  ஓலம்&#8230; அதை கேட்டுக்கொண்டே அவன் வீட்டிற்குள் நாங்கள் நுழையும்போது என் உடல் சிலிர்த்து போனது. உள்ளே சென்ற உடன் அவன் என்னை கட்டித்தழுவி கதறி புலம்பியபோது ஒரு நிமிடம் என்னை ஏதோ செய்துவிட்டது. அம்மாவென்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பத்து மாதம் சுமந்து பெற்று தன் குழந்தைகாகவே  வாழ்ந்து மடியும் ஒரே உறவு அம்மா தான். அதன் இழப்பு நிச்சயம் ஈடு செய்ய முடியாத ஒன்று.</p>
<p>இரவு பதினோரு மணிவரை இடுகாட்டில் அவனுடன் இருந்து உடல் தகனம் செய்துவிட்டு வந்தோம். வீட்டிற்கும் வந்தும் கூட அந்த பாதிப்பு என்னை விட்டு அகலவில்லை. அவன் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, நல்ல வேலை கிடைத்து சந்தோசமாக இருந்தால் கூட அவன் அம்மாவிற்கு கடைசி வரை தெரியாதே? இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்து கொண்டு இருந்தது. அவன் மனநிலையை நானும் உணர்த்து கொண்டிருத்த அந்த நடுநிசியில் அவனுக்காக  வெளிப்பட்ட பாதிப்பே இந்த கவிதை.</p>
<p>அம்மா!<br />
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..<br />
குழந்தையாய் நான்<br />
சாப்பிட அடம்பிடித்த போது,<br />
நீ பாசத்துடன் ஊட்டிய<br />
அந்த நிலாச்சோறு.</p>
<p>முழுக்கால் சட்டை வயதில்<a href="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2010/06/mother-child.jpg"><img class="alignright size-medium wp-image-449" title="mother-child" src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/uploads/2010/06/mother-child-240x300.jpg" alt="" width="240" height="300" /></a><br />
பள்ளிக்கு செல்லும் முன்<br />
அப்பாவுக்கு தெரியாமல் நீ கொடுக்கும்<br />
அந்த பத்து ரூபாய் நோட்டு.</p>
<p>எனக்கு காய்ச்சல் வரும்போதெல்லாம்<br />
உன் கண்களில் வரும்<br />
அந்த கண்ணீர் துளி.</p>
<p>சரியாக படிப்பதில்லையென<br />
அப்பா என்னை அடிக்கும் போது<br />
நீ மட்டுமே என் மேல் வைத்த<br />
அந்த நம்பிக்கை.</p>
<p>அனைத்தையும்<br />
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?<br />
எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..</p>
<p>நீ உடல் நிலை பாதிக்கப்பட்டு<br />
உன் கடைசி தருணத்தில்<br />
எல்லோரும் உனக்காக வேண்டிக்கொண்டு இருக்க,<br />
நீயோ<br />
என்னை பற்றியும்<br />
என் எதிர்காலம் பற்றியும் பேசியவாறு<br />
என் மடியில் உயிர் பிரிந்த<br />
அந்த தருணம்.</p>
<p>இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.<br />
அனைத்தையும்<br />
அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியுமா?</p>
<p>அம்மா!<br />
இப்போது<br />
நீ எதிர்பார்த்த நிலையில்<br />
நானிருக்கிறேன்.என்றாலும்<br />
என்னுடன்<br />
எனக்கு துணையாய் இருப்பதோ<br />
உன் குரலும்<br />
உன் உருவமும் தான்.</p>
<p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/plugins/add-to-any/share_save_256_24.png" width="256" height="24" alt="Share/Bookmark"/></a> </p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/tamil-poem-still-i-remember-mummy/feed/</wfw:commentRss>
		<slash:comments>12</slash:comments>
		</item>
		<item>
		<title>நினைத்து நினைத்து பார்த்தேன்</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/ninaithu-ninaithu-parthen-karaoke-video-song/</link>
		<comments>http://www.cpraveen.com/suvadugal/ninaithu-ninaithu-parthen-karaoke-video-song/#comments</comments>
		<pubDate>Sun, 22 Nov 2009 08:10:43 +0000</pubDate>
		<dc:creator>பிரவீன்</dc:creator>
				<category><![CDATA[என் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[7 ஜி ரெயின்போ காலனி]]></category>
		<category><![CDATA[இழப்பு]]></category>
		<category><![CDATA[என் குரல்]]></category>
		<category><![CDATA[கவிதை]]></category>
		<category><![CDATA[நினைத்து நினைத்து பார்த்தேன்]]></category>
		<category><![CDATA[வீடியோ பாடல்]]></category>

		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=325</guid>
		<description><![CDATA[7ஜி ரெயின்போ காலனி என்ற தமிழ் திரைப்படத்தின் நினைத்து நினைத்து பார்த்தேன்  பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? சில வருடங்களுக்கு முன்னால் எல்லோர் மனதையும் கட்டி வைத்த பாடல் அது.  அதை முனுமுனுக்காதவர்களும் யாரும் கண்டிப்பாக இருக்க முடியாது. எனக்கும் அது மிகவும் பிடித்த  பாடல்.  கல்லூரி வாழ்கையின் போது அவ்வளவு கிரேஸ் அதன் மேல். அடிக்கடி நான் தனிமையில் பாடும் பாடலில் இதுவும் ஒன்று. நீண்ட மாதங்களாக கிடப்பில் இருந்த இதோ அதன் வீடியோ [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>7ஜி ரெயின்போ காலனி என்ற தமிழ் திரைப்படத்தின் நினைத்து நினைத்து பார்த்தேன்  பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? சில வருடங்களுக்கு முன்னால் எல்லோர் மனதையும் கட்டி வைத்த பாடல் அது.  அதை முனுமுனுக்காதவர்களும் யாரும் கண்டிப்பாக இருக்க முடியாது. எனக்கும் அது மிகவும் பிடித்த  பாடல்.  கல்லூரி வாழ்கையின் போது அவ்வளவு கிரேஸ் அதன் மேல். அடிக்கடி நான் தனிமையில் பாடும் பாடலில் இதுவும் ஒன்று. நீண்ட மாதங்களாக கிடப்பில் இருந்த இதோ அதன் வீடியோ பாடல் என் குரலில் இப்போது என் வலைப்பூவில்.. ஓரளவிற்கு பீ&#8230;.ல் பண்ணி பாடி இருக்கேன்.. அதனால அவ்வளவு மோசமா இருக்காதுன்னு நினைக்கிறன்&#8230;. ஹி.. ஹீ.. ஹீ.. கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.. உங்கள் பொறுமைக்கு நன்றி..</p>
<p><object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" width="560" height="340" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"><param name="allowFullScreen" value="true" /><param name="allowscriptaccess" value="always" /><param name="src" value="http://www.youtube.com/v/JYOpDNCPQgo&amp;hl=en_GB&amp;fs=1&amp;rel=0&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999" /><param name="allowfullscreen" value="true" /><embed type="application/x-shockwave-flash" width="560" height="340" src="http://www.youtube.com/v/JYOpDNCPQgo&amp;hl=en_GB&amp;fs=1&amp;rel=0&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999" allowscriptaccess="always" allowfullscreen="true"></embed></object></p>
<p>இதோ வழக்கம் போல் அதன் பாடல் வரிகளும் போனஸாக&#8230;</p>
<p>நினைத்து நினைத்து பார்த்தேன்<br />
நெருங்கி விலகி நடந்தேன்<br />
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ&#8230;.<br />
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்<br />
எடுத்து படித்து முடிக்கும் முன்னே<br />
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே<br />
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ&#8230;.<br />
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்</p>
<p>அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்<br />
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்<br />
உதிர்ந்து போன மலரின் மெளனமா&#8230;<br />
தூது பேசும் கொலுசின் ஒலியை<br />
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்<br />
உடைந்து போன வளையல் பேசுமா&#8230;<br />
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்<br />
விரல்கள் இன்று எங்கே?<br />
தோளில் சாய்ந்து கதைகள் பேச<br />
முகமும் இல்லை இங்கே!<br />
முதல் கனவு முடிந்திடும் முன்னமே<br />
தூக்கம் கலைந்ததே!</p>
<p>நினைத்து நினைத்து பார்த்தேன்<br />
நெருங்கி விலகி நடந்தேன்.<br />
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ&#8230;.<br />
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்</p>
<p>பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்<br />
காலம் தோறும் காதினில் கேட்கும்<br />
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?&#8230;<br />
பார்த்து போன பார்வைகள் எல்லாம்<br />
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்<br />
உயிரும் போகும் உருவம் போகுமா?&#8230;<br />
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே<br />
தீயில் சேர்ந்து போகும்<br />
திருட்டு போன தடயம் பார்த்தும்<br />
நம்பவில்லை நானும்<br />
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்<br />
என்றே வாழ்கிறேன்&#8230;.</p>
<p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/plugins/add-to-any/share_save_256_24.png" width="256" height="24" alt="Share/Bookmark"/></a> </p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/ninaithu-ninaithu-parthen-karaoke-video-song/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எனக்காக பிராத்தனை செய் சகோதரா</title>
		<link>http://www.cpraveen.com/suvadugal/pray-for-me-brother/</link>
		<comments>http://www.cpraveen.com/suvadugal/pray-for-me-brother/#comments</comments>
		<pubDate>Sat, 09 May 2009 13:45:45 +0000</pubDate>
		<dc:creator>பிரவீன்</dc:creator>
				<category><![CDATA[என் பாடல்கள்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[இழப்பு]]></category>
		<category><![CDATA[என் குரல்]]></category>
		<category><![CDATA[ரஹ்மான்]]></category>

		<guid isPermaLink="false">http://www.cpraveen.com/suvadugal/?p=220</guid>
		<description><![CDATA[என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன?  முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல. நிறைய உயிரிழப்புகளை  நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன?  முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.</p>
<p>நிறைய உயிரிழப்புகளை  நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில்  இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.</p>
<p>என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை  நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.</p>
<p>போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.</p>
<p>எனக்காக பிராத்தனை செய் சகோதரா  -  இதோ  நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு  இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.</p>
<p style="text-align: center;"><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/ujLmgJ8YN8U&amp;rel=0&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/ujLmgJ8YN8U&amp;rel=0&amp;color1=0x3a3a3a&amp;color2=0x999999" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></object></p>
<p>எனக்காக பிராத்தனை செய் சகோதரா.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.<br />
நீ தேடிக்கொண்டு இருக்கிறாயா?<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.</p>
<p>என்னுடைய வாழ்கையின்<br />
எல்லா கேள்விகளுக்கும்<br />
பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்</p>
<p>என்னை தனியாக விட்டுச்செல்வாயா<br />
இல்லையேல்<br />
என்னருகில் துணையாக இருப்பாயா?</p>
<p>இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?<br />
இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?<br />
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது&#8230;</p>
<p>அவன்<br />
விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்<br />
உயிருடன் இருப்பதற்கு.</p>
<p>சரியான நேரத்தில்,<br />
ஒரே ஒரு தருணத்தில்,<br />
ஒரு நிமிடமாவது,<br />
உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?</p>
<p>நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,<br />
ஆனால் நமக்கு தேவையான அன்பை<br />
அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.</p>
<p>நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான<br />
காரணத்தை தேடுகிறாயா?</p>
<p>எனக்காக பிராத்தனை செய் சகோதரா.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.<br />
என்று அவன் சொன்னான்..</p>
<p>இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு<br />
ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.<br />
இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்<br />
குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..<br />
என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.</p>
<p>நீ கொடுக்க விரும்பாத போது<br />
என்னை எடுக்க விடாதே&#8230;<br />
என்னை வாழவிடு<br />
அது போதும்&#8230;</p>
<p>நீ கொடுக்க விரும்பாத போது<br />
என்னை எடுக்க விடாதே&#8230;<br />
என்னை வாழவிடு<br />
அது போதும்&#8230;</p>
<p>எனக்காக பிராத்தனை செய் சகோதரா.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.<br />
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.</p>
<p>நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான<br />
காரணத்தை தேடுகிறாயா?</p>
<p><a class="a2a_dd addtoany_share_save" href="http://www.addtoany.com/share_save"><img src="http://www.cpraveen.com/suvadugal/wp-content/plugins/add-to-any/share_save_256_24.png" width="256" height="24" alt="Share/Bookmark"/></a> </p>]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.cpraveen.com/suvadugal/pray-for-me-brother/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
