நானெழுதிய மற்ற சிறுகவிதைகளை போலில்லாமல் இதில் தமிழ் சினிமா பெயர்கள் முடிவடையுமாறு ஒரு சிறு முயற்சி. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எரிமலையை கூட
பனிமலையாக மாற்றும்
உன் பார்வையை தரிசிக்க
பாதையில் காத்திருக்கிறேன்
நீ வருவாயென.
——————————————————————————————-
அந்திசாயும் ஒரு மாலையிலே,
நாம் காதல் புரிந்த வேளையிலே,
முத்தத்தால் எனை மூழ்கடிப்பாயென
நினைத்துக்கூட பார்த்ததில்லை,
உன்னை முதலாய்
சந்தித்த வேளையிலே.
——————————————————————————————-
ஆக்ராவில் இல்லையென்றாலும்,
என் இதயத்தில் கட்டியிருப்பதால்,
நானும்
ஷாஜஹான்.
——————————————————————————————-
காதல் கொண்டேன்.
கவிஞனானேன்.
——————————————————————————————-
காதல் கொண்டேன்
கண்ணீர கொண்டேன்.
——————————————————————————————-
பார்வைகளில் நீயெனை உரசிட
பற்றியெரியும் காதல் தீ
அனையும் முன்,
உன்னைக்கொடு என்னை தருவேன்.
——————————————————————————————-
நந்தவனத்தில் தொலைந்த
பூக்களெல்லாம் புடைசூழ
நடக்கிறதோர்
பூமகள் ஊர்வலம்.
——————————————————————————————-

மழைக்கு ஒதுங்கிய மரத்தடியில்,
தனிமை என்னை பாடாய் படுத்த,
உன் ஈரச்சேலை என்னுள் தீயை மூட்ட,
முத்தமிட்டு அதை நீ அனைத்ததை
மறக்கமாட்டேனென்
நினைவிருக்கும் வரை.
——————————————————————————————-
புகைப்பதை நிறுத்தச்சொல்லி
நீ என்னுடன் பகை கொண்டபோது
உடனே நானதை நிறுத்தினேனே,
அது உனக்கு உணர்த்தியிருக்கும்
நான் செய்தது
காதலுக்கு மரியாதை.
——————————————————————————————-
நான் மறக்கச்சொல்லியும்
மறுக்கிறதென் இதயம்
துடிப்பதற்கு,
பூவே உனக்காக.
——————————————————————————————-
வழக்கமான இரவென்றாலும்,
வழக்கமான ஆசைகளோடு,
இன்றும் போர்வைக்குள் பதுங்கினேன்.
என்னை நனவில் காதலிக்காத நீ,
கனவிலாவது காதலிக்க வருவாய்
என்ற ஆசையுடன் கண்களை மூடி
நினைத்தேன் வந்தாய்.
——————————————————————————————-
ஆதரவாய் உன் தோள்சாயும் போது,
ஆறுதலாய் உதிரும் உன் வார்த்தைகளுக்காக,
என்றும் இருப்பேன்
ப்ரியமுடன்.
——————————————————————————————-
கஷ்டமான காலங்களில்
மனம் சிக்கித்தவிக்கும் வேளைகளில்
நான் கண்ணீர சிந்தும் நேரங்களில்
உன் புன்னகையை
பார்த்தாலே பரவசம்.
——————————————————————————————-

பிடியின்றி விழுந்த குழி
புதைக்குழி என்றறிந்தும்
உன் இதயக்குழி என்பதால்
எழுந்துவர மனமில்லையென்
ப்ரியமானவளே.
——————————————————————————————-
என் உயிரைக் கொல்லாமல்
உடலில் மின்சாரம் பாய்கிறது நீயென்
கன்னத்தில் முத்தமிட்டால்.
——————————————————————————————-
கெஞ்சிக்கேட்டும் கிடைக்காத,
காலில் விழுந்தும் கிடைக்காத,
காதலியின் முத்தம்
எதிர்பாராமல் கிடைத்தால்
துள்ளாத மனமும் துள்ளும்.
——————————————————————————————-
ஆண்களின் இதயங்கள் எரிக்கப்பட
பெட்ரோல் தேவையில்லை.
தீ கூட தேவையில்லை.
பெண்களின்
பார்வை ஒன்றே போதுமே.
——————————————————————————————-
தோற்றம்: http://www.cpraveen.com/suvadugal/tamil-short-poems-part-three
என்னிடம் நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள்… முகம் தெரியாத பலர் கூட இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. “கூகிளின் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மையா?”. “நிஜமாகவே கூகுளில் இருந்து காசோலை அனுப்புவார்களா?” அவர்கள் அநேகமாக அடுத்து கேட்கும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும். “அதற்கு முன்பணம் ஏதேனும் கட்டவேண்டுமா? தினமும் நாம் அவர்கள் தரும் விளம்பரங்களை கிளிக் செய்துக்கொண்டு இருந்தால் நமக்கு பணம் வருமாமே??”. இந்த கேள்வியிலேயே நான் உணர்ந்து கொள்வேன் அவர்கள் வழி தவறி சென்று கொண்டு இருக்கிறார்கள் என்று.
இன்றைய இணைய பயனாளர்கள் அனைவரும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்து வைத்து உள்ளார்கள். ஆனால் பலர் அதற்கான வழிமுறையை சரிவர அறிந்திருக்கவில்லை. இணையத்தை பொருத்தவரை 99% மோசடி வியாபாரம் தான் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தில் மூலம் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களிடம் இருந்து பணம் சம்பாதிக்கும் கும்பலே இங்கு ஏராளம்.
உதாரணமாக, கூகிள் கேஷ் கவ் (Google Cash Cow), கூகிள் மணி (Google Money), கூகிள் கேஷ் சிஸ்டம் (Google Cash System) என்று கூகிளின் பெயர் வருமாறு பல்வேறு இணையதளங்கள் இருக்கிறது. “வீட்டில் அமர்ந்தவாறு தினமும் நூற்றுக்கணக்கான அமெரிக்க டாலர்களில் கூகிளின் மூலம் பணம் சம்பாதிக்கலாம். நாங்கள் அளிக்கும் விளம்பரங்களை நீங்கள் வியர்வை சிந்தாமல் கிளிக் செய்து கொண்டு இருந்தால் போதுமானது. காசோலை உங்கள் வீடு தேடி வரும்” என்று அவர்கள் வலை விரித்து காத்துக்கிடப்பர்.
நோகாமல் நோம்பி கும்பிட நினைக்கும் நம் அப்பாவி மக்கள் இதை விடுவார்களா? அந்த இணையத்தளத்தில் சென்று அவர்களை தொடர்பு கொள்ளுகிறார்கள். முன்பணமாக சில ஆயிரங்கள் கொடுத்தால் விளம்பரங்களையும், பணம் சம்பாதிக்கும் வழி முறைகளையும் கூறுவதாக அவர்கள் சொல்ல, நம்ம ஆள் அவர்கள் கேட்ட பணத்தை கட்டிவிட்டு ஏமாந்து போகிறான். இவ்வாறு தான் கூகிளின் மூலம் பணம் சம்பாதிக்க நினைத்து பலர் சிக்கிக்கொள்ளுகிறார்கள். அவர்களுக்கும் கூகிளிர்க்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது. கூகுளின் பெயரை அவர்கள் சேர்த்துக்கொண்டதால் அனைவரும் நம்பிவிடுகின்றனர்.
பிறகு, கூகிளின் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மையில்லையா? வெறும் ஏமாற்று வேலையா? என்று நீங்கள் கேட்டால் அதுவும் தவறு. கூகிளின் மூலம் பணம் ஈட்டுவது முற்றிலும் உண்மையே. அதற்கு கூகிள் ஆட்சென்ஸ் அக்கௌன்ட் இருந்தால் மட்டும் போதுமானது. நானும் கூகுளிடம் இருந்த இதுவரை சில காசோலை பெற்று இருக்கிறேன். அதற்காக யாரும் யாருக்கும் முன்பணம் கட்டத்தேவை இல்லை. இதோ இந்த வாரம் நான் பெற்ற மற்றுமொறு கூகிள் காசோலை.

பி.கு: இந்த இடுக்கையின் நோக்கம் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறையை விளக்கவோ, இணைய மோசடிகளை பற்றி தெளிவுபடுத்தவோ, கூகிள் ஆட்சென்ஸ்சை பயன்படுத்தும் முறைகளை பதிவிக்கவோ அல்ல. கூகிள் மூலம் பணம் சம்பாதிப்பது உண்மை என்பதை உறைக்கவும், மோசடிகளில் விழாதிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான்.
பசித்தழுகிறது பச்சிளங்குழந்தை.
அறுந்து விழாத தொப்புள் கொடியை
பார்க்கும் கண்கள் சொல்லிவிடும்
புதியதாய் பிறந்த குழந்தையென்று.
அழுகுரல் கேட்டுணர்ந்து வந்த தாய்
குழந்தையை மடியினில் வைத்து
ஊட்டினாள் புட்டிப்பாலை.
பசியடங்கி படுத்துறங்கிய குழந்தையைக்கண்டு
கண்ணீரோடு கீழே ஊற்றினாள்
மீதமிருந்த கள்ளிப்பாலை.
உடையில்லா உடலைக்கண்டு
உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
கொல்லப்பட்டது பெண்பாலை!